NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ
    மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை

    வயநாடு மீட்புப் பணிகளில் உதவிய வீரர்கள் மற்றும் நாய்ப் படைக்கு உணர்வுபூர்வ பிரியாவிடை: வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 09, 2024
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம் கேரள மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வயநாட்டு மக்கள் மனதைக் கவரும் வகையில் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

    ராணுவ பணியாளர்கள் அவர்களது நாய் பிரிவுகளுடன் வந்திருந்தனர்.

    கொச்சி பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) வெளியிட்ட வீடியோவில், வீரர்கள் தங்களுடைய தங்குமிடத்தை விட்டு வெளியேறும்போது உள்ளூர் மக்களிடமிருந்து பெரும் கரகோஷத்தைப் பெறுவதைக் காண முடிந்தது.

    122 காலாட்படை பட்டாலியனின் வீரர்களும் மீட்புக் குழுக்கள் தங்கியிருந்த மவுண்ட் தாபோர் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களால் கௌரவிக்கப்பட்ட பாராட்டப்பட்டனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரியாவிடை வீடியோ

    #WayanadLandslide
    Watch | Emotional send-off to #IndianArmy personnel from people of all walks of life at #Wayanad.
    Grateful for our brave heroes who risked everything during the landslide #RescueOps.
    Your courage & sacrifice won't be forgotten…#WeCare🇮🇳@giridhararamane pic.twitter.com/u2csEIo5r7

    — PRO Defence Kochi (@DefencePROkochi) August 8, 2024

    மீட்பு பணிகள்

    பல உயிர்களை மீட்க துணிச்சலுடன் செயல்பட்ட மீட்பு படையினர் 

    ஜூலை 31 அன்று வயநாட்டின் முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலா மற்றும் நூல்புழா ஆகிய கிராமங்களில் பலத்த மழைக்கு மத்தியில் நான்கு மணி நேர இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் அழிவின் பாதையை விட்டுச்சென்றன.

    அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவம் மற்றும் கடற்படை உள்ளிட்ட மீட்பு நிறுவனங்களால் மீட்கப்பட்டுள்ளனர். எனினும்,138 பேர் இன்னும் காணவில்லை.

    "மேஜர் ஜெனரல் மேத்யூ தலைமையில் உள்ளூர் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவுடன் நடந்த கூட்டு நடவடிக்கை இது. தன்னார்வலர்களுக்கு பஞ்சமில்லை. வயநாடு மட்டுமின்றி கேரளா, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து எங்களுக்கு உதவினார்கள்" என கர்னல் பரம்வீர் சிங் நாக்ரா ANI இடம் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வயநாடு
    மீட்பு பணி
    கேரளா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    வயநாடு

    வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன?  நிலச்சரிவு
    வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம் நிலச்சரிவு
    வயநாடு மக்களுக்கு 100 வீடுகளை கட்டித் தருவதாக கர்நாடக அரசு அறிவிப்பு சித்தராமையா
    வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிய சிரஞ்சீவி - ராம் சரண் ராம் சரண்

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் வானிலை ஆய்வு மையம்

    கேரளா

    "கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர்  இந்தியா
    இந்தியாவின் முதல் AI ஆசிரியை 'ஐரிஸ்', கேரளா பள்ளியில் அறிமுகம்  செயற்கை நுண்ணறிவு
    கேரளாவில் மம்ப்ஸ் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: மம்ப்ஸ்  வைரஸைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  சுகாதாரத் துறை
    கேரளாவில் எகிறும் விஜய் ஃபீவர்; வைரலாகும் வீடியோ விஜய்

    இந்திய ராணுவம்

    LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா இந்தியா-சீனா மோதல்
    7 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாள்: பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடிய URI சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பாகிஸ்தான்
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்
    இந்திய படைகள் மாலத்தீவுகளை விட்டு வெளியேற வேண்டும்: அதிபர் முகமது முய்ஸோ அறிவிப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025