ஏர் இந்தியா: செய்தி
கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்
இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது.
வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்
விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.
முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை இன்று அறிமுகப்படுத்தியது.
விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்
பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம்(DGCA) 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை
காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.
நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான தனது திட்டமிடப்பட்ட விமானங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.
ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா
ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்படும் என காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை அடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் இந்தியா கோரியுள்ளது.
நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்
சீக்கியர்களுக்கான நீதி(SFJ) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் நிறுவனரான பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தங்கள் விமானங்களுக்கு புதிய வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் இந்தியா நிறுவனமானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தங்களது புதிய வர்த்தக சின்னம் மற்றும் வர்த்தக அடையாளங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
புதிய லோகோவுடன் புதுப்பொலிவு பெறும் ஏர் இந்தியா விமானங்கள்
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரியில் டாடா நிறுவனம் கைப்பற்றியது.
பெண் பயணிகளுக்கு பக்கவாட்டு இருக்கை.. ஏர் இந்தியாவின் புதிய அறிவிப்பு!
விமானப் பயணங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், பாலின ரீதியிலான இருக்கை வசதியை வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
புதிய லோகோ மற்றும் விமான அடையாளங்களை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
தங்களது புதிய லோகோ மற்றும் புதிய விமான அடையாளங்களை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். முன்னரே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றியது டாடா குழுமம்.
விமானத்தில் பர்ஸை தொலைத்த செல்வராகவன்; 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம்
கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், தொடர்ந்து, '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' போன்ற கிளாசிக் படங்களை உருவாக்கினார்.
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட திருச்சி ஏர் இந்தியா விமானம்
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று(ஜூலை 31) திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
செல்போன் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கட்ட ஏர் இந்தியா விமானம்
ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து புது டெல்லியிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று ஒரு செல்போன் வெடித்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கட்டது.
நடு வானில் ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய பயணி
ஜூலை 9ஆம் தேதி சிட்னியில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தில் ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரியை ஒரு பயணி தாக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் தரையில் மலம் கழித்ததற்காக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள்
வானிலை காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா(ஏ-112) விமானத்தின் விமானிகள் திடீரென்று அந்த விமானத்தை ஓட்ட மறுத்ததால், அது 5 மணி நேரம் தாமதமானது.
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை
விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர்
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியாவின் மாற்று விமானம் இன்று(ஜூன் 8) ரஷ்யாவின் மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது.
ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.
இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்
புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக, இன்று ரஷ்யாவின் மகடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்
நேற்று டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர்.
ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானிக்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!
டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஏர் இந்தியா!
தங்களது டிஜிட்டல் சேவை தளங்களை நவீனமயாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்.
ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி
விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.
விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு!
ஏர் இந்தியா நிறுவனம் புதிய பிரீமியம் பொருளாதார அனுபவத்தை பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா!
உலகம் முழுவதும் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் வேலையை எளிதாக்க சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி
கர்நாடகாவின் KSRTC பேருந்தில் 20 வயது பெண் சக பயணிக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையின் மீது 30 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படுகிறது.
நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்!
ஏர் இந்தியாவின் மூன்று உள்நாட்டு இடங்களுக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை இப்போது பட்ஜெட் கேரியர் ஏர் ஏசியா இந்தியாவால் இயக்கப்படும் என்று டாடாவுக்குச் சொந்தமான முழு சேவையை இன்று தெரிவித்துள்ளது.
இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்
கோழிக்கோடு கிளம்பிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன்
கடந்த நவம்பர் 26ம் தேதி, மும்பை தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியாவின் விமானத்தில் பயணித்த போது குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.