NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம் 
    இந்த சம்பவம் குறித்த அறிக்கை, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 17, 2023
    03:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர்.

    விமானம் சிட்னியில் தரையிறங்கிய பிறகு மூன்று பயணிகள் மருத்துவ உதவியைப் பெற்றதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஏர் இந்தியாவின் B787-800 விமானம் கடுமையாக குலுங்கியதால், அந்த விமானத்தில் பயணித்த ஏழு பயணிகளுக்கு உள்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    "2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அன்று ஏர் இந்தியாவின் விமானம் AI302, டெல்லியில் இருந்து சிட்னிக்கு புறப்பட்டது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது ஆட்டம் கண்டது. அதனால், விமானத்தில் இருந்த பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டது." என்று ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    DETAILS

    கடுமையான குலுங்கல் காரணமாக ஏழு பயணிகளுக்கு சிறு சுளுக்கு ஏற்பட்டது

    "விமானம் சிட்னியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மூன்று பயணிகள் வந்தவுடன் மருத்துவ உதவியைப் பெற்றனர். அவர்களில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    "விமானத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்த அறிக்கை, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    கடுமையான குலுங்கல் காரணமாக ஏழு பயணிகளுக்கு சிறு சுளுக்கு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுபோன்ற இன்னொரு சம்பவம் கடந்த ஆண்டு மே மாதம் பதிவானது.

    அப்போது, 195 பயணிகளுடன் மும்பையில் இருந்து தர்பங்கா கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம், கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயமடைந்தனர்.

    இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த பயணிகளில் ஒருவர் நீண்டநேர சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஏர் இந்தியா
    டெல்லி
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  காங்கிரஸ்
    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  காங்கிரஸ்
    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம் காங்கிரஸ்
    சிபிஐயின் புதிய இயக்குநர்: யாரிந்த பிரவீன் சூட் காவல்துறை

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    டெல்லி

    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் இந்தியா
    கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி இந்தியா
    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது ஆம் ஆத்மி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025