NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை 
    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை

    விமானத்தை தகர்க்கப் போவதாக காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்ததை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது: உளவுத்துறை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 07, 2023
    05:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி (SFJ) தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தை வெடிக்கச் செய்வதாக விடுத்த எச்சரிக்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி நியூஸ்18 தெரிவித்துள்ளது.

    அவர் இந்தியாவிற்கு எதிராக இளைஞர்களை மூளைச்சலவை செய்ய முயற்சிப்பதாகவும், 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தில் 329 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பை மீண்டும் செய்யப்போவதாக அச்சுறுத்துவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

    ஏர் இந்தியா விமானங்கள் இயங்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் அதிகாரிகளும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தியாவின் தேடப்படும் காலிஸ்தானி பிரிவினைவாதிகளின் பட்டியலில், நியமிக்கப்பட்ட பயங்கரவாதியான பன்னுன் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    card 2

    பன்னூன் விடுத்த எச்சரிக்கை என்ன?

    ஜூன் மாதம், கனேடிய மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கசந்த பிறகு,செப்டம்பரில், பன்னூன் இந்தியாவில் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை சீர்குலைக்க போவதாக அச்சுறுத்தினான்.

    அதை தொடர்ந்து, உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நாளான நவம்பர் 19 அன்று சீக்கியர்களை ஏர் இந்தியா விமானத்தில் பறக்கவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனினும், பனூனால் எதையும் செய்ய முடியாது என்று உளவுத்துறை அதிகாரிகள் நம்பினாலும், அவன் இந்தியாவிற்கு எதிராக இளைஞர்களை திசை திரும்புவதாக பலமாக சந்தேகிக்கப்படுவதாக அறிக்கை கூறியது.

    சமீபத்திய அச்சுறுத்தலை தொடர்ந்து, அவன் விமானத்தை கடத்தி, பணயக்கைதிகள் வைத்து கோரிக்கை எழுப்பக்கூடும் எனவும் சந்தேகப்படுகிறது உளவுத்துறை.

    card 3

    இதற்கு முன்னரும் அரங்கேறிய கடத்தல் நாடகம்

    1980 களின் முற்பகுதியில் சீக்கிய போராளிகள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களை ஐந்து முறை கடத்தியதாக கூறப்படுகிறது.

    அதில் குறைந்தது இரண்டு, 1981 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையது மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்த பயன்படுத்தப்பட்டது.

    1984 ஆம் ஆண்டு, இந்தியாவில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை மேற்கோள் காட்டி , வான்கூவரில் இருந்து லண்டன் வரையிலான ஏர் இந்தியாவின் "உலகளாவிய முற்றுகைக்கு" பன்னுன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான நவம்பர் 19ஆம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை மூட இந்திய அரசை அவர் கோரியதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பயங்கரவாதம்
    உளவுத்துறை
    ஏர் இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள் இங்கிலாந்து
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் இந்தியா
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார் அம்ரித்பால் சிங்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்

    உளவுத்துறை

    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025