NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை தீவிரமாக எடுத்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா

    எழுதியவர் Srinath r
    Nov 10, 2023
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய விமானங்களுக்கு எதிரான சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கனடாவில் இருந்து புறப்பட்டு, தரையிறங்கும் ஏர் இந்தியா விமானங்கள் தகர்க்கப்படும் என, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) நிறுவனர் குர்பத்வந்த் சிங் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    மேலும் சீக்கியர்கள், நவம்பர் 19ஆம் தேதிக்கு பின்னர், ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதை தவிர்க்க அவர் அறிவுறுத்தி இருந்தார்.

    காலிஸ்தான் பயங்கரவாதியின் எச்சரிக்கையை தொடர்ந்து கனடா அரசு, இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக கனடா போக்குவரத்து அமைச்சர் ட்விட்

    இச்சம்பவம் குறித்த சமீபத்திய தகவலை வழங்கிய கனேடிய போக்குவரத்து அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், கனடா ஒவ்வொரு அச்சுறுத்தலையும் "மிகவும் தீவிரமாக" எடுத்துக்கொள்கிறது என்று கூறினார்.

    விமானங்கள் தகர்ப்பு குறித்த எச்சரிக்கையை கனடா அரசாங்கம் தீவிரமாக எடுத்துள்ளதாகவும், சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் காட்சிகள் குறித்து விசாரித்து வருவதாகவும்,

    கனடியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (EAM) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பிரச்சனைகளை கனடாவிடம் எழுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் இது போன்ற தீவிரவாத அச்சுறுத்தல்களை, இந்தியா கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஏர் இந்தியா விமானங்களுக்கு எதிரான எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துள்ள கனடா

    Our government takes any threat to aviation extremely seriously. We are investigating recent threats circulating online closely and with our security partners. We will do everything necessary to keep Canadians safe.

    — Pablo Rodriguez (@pablorodriguez) November 9, 2023

    4th card

    யார் இந்த குர்பத்வந்த் சிங் ?

    சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் நிறுவனரான குர்பத்வந்த் சிங், இந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய காலிஸ்தானி பிரிவினைவாதி ஆவார்.

    கனடாவில் சில மாதங்களுக்கு முன்னர் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கனடா-இந்தியா இடையே ஆன உறவில் விரிசில் ஏற்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக மிரட்டல் விடுத்திருந்தார்.

    கடந்த சனிக்கிழமை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட குர்பத்வந்த் சிங், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான போராட்டத்தை சுட்டிக்காட்டி, ஏர் இந்தியா விமானங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.

    மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றவர்களை பாராட்டி இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள் இங்கிலாந்து
    சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள் இந்தியா
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார் அம்ரித்பால் சிங்

    இந்தியா

    'பாரம்பரிய நீராவி சிறப்பு ரயில்களை' மேம்படுத்தத் திட்டமிடும் இந்திய ரயில்வே ரயில்கள்
    'நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் இன்னும் காட்டப்படவில்லை': கனடாவுக்கான இந்திய தூதர் கனடா
    உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா சீனா
    உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் டெல்லி

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் தீவிரவாதிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025