NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு  ஜாமீன்
    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன்

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன்

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் 26ம் தேதி, மும்பை தொழிலதிபர் சங்கர் மிஸ்ரா, ஏர் இந்தியாவின் விமானத்தில் பயணித்த போது குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் முதலில் அளிக்கப்பட்ட புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் அப்பெண் நேரடியாக டாடா குழும தலைவர் சந்திரசேகருக்கு கடிதம் எழுதினார்.

    இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் போலீசில் புகார் அளித்ததையடுத்து மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா பெங்களூருவில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.

    நீதிமன்றம் உத்தரவு

    சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்கிய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ரா இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    மேலும் இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    விமானம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    இந்தியாவில் நேரம் தவறாத விமான சேவை வழங்கும் நிறுவனமாக இண்டிகோ தேர்வு வானூர்தி
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025