NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
    இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்தது.

    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

    கோழிக்கோடில் இருந்து கிளம்பும் போது ஓடுபாதையில் விமானத்தின் வால் பகுதி அடிபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

    அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

    "திருவனந்தபுரத்தில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் விமான ஊழியர்கள் கவனித்து வருகின்றனர்" என்று ஏர்-இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்தது.

    ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(IX-385), 168 பயணிகளுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டவுடன் இந்த அவசரநிலை திரும்ப பெறப்பட்டது.

    கேரளா

    மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன: அதிகாரிகள்

    திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் அதானி குழுமம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததுமே விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    "11.36 மணியளவில் நாங்கள் விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்தோம். மேலும, அனைத்து அவசர சேவைகளும் உடனடியாக எச்சரிக்கப்பட்டது." என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டி போன்றவை விமான நிலையத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததுடன், விமான நிலையத்தின் அவசர கதவுகளும் திறக்கப்பட்டன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ்காரர்களை ஏற்றிச் செல்லும் மூன்று பேருந்துகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

    "இருப்பினும், மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன." என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஏர் இந்தியா
    கேரளா

    சமீபத்திய

    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்

    இந்தியா

    சீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள் இந்திய ராணுவம்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஆம் ஆத்மி
    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் மோடி

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் விமான சேவைகள்
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி வைரல் செய்தி
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025