NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
    இந்தியா

    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது

    எழுதியவர் Sindhuja SM
    February 24, 2023 | 07:20 pm 1 நிமிட வாசிப்பு
    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது
    இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்தது.

    வால் பகுதியில் அடிபட்டதை அடுத்து, கோழிக்கோடில் இருந்து தம்மம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், இன்று(பிப்-24) திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது. கோழிக்கோடில் இருந்து கிளம்பும் போது ஓடுபாதையில் விமானத்தின் வால் பகுதி அடிபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. "திருவனந்தபுரத்தில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் விமான ஊழியர்கள் கவனித்து வருகின்றனர்" என்று ஏர்-இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(IX-385), 168 பயணிகளுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டவுடன் இந்த அவசரநிலை திரும்ப பெறப்பட்டது.

    மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன: அதிகாரிகள்

    திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் அதானி குழுமம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததுமே விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. "11.36 மணியளவில் நாங்கள் விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்தோம். மேலும, அனைத்து அவசர சேவைகளும் உடனடியாக எச்சரிக்கப்பட்டது." என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டி போன்றவை விமான நிலையத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ததுடன், விமான நிலையத்தின் அவசர கதவுகளும் திறக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ்காரர்களை ஏற்றிச் செல்லும் மூன்று பேருந்துகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. "இருப்பினும், மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன." என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    ஏர் இந்தியா
    கேரளா

    இந்தியா

    தொடர் தோல்வியால் விரக்தி : பயிற்சியாளரை மாற்றுகிறார் பிவி சிந்து! விளையாட்டு
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி மகாராஷ்டிரா
    ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்! கூகுள்
    வெறும் ரூ.89 இல் வீட்டு உணவு - அறிமுகமான Zomato Everyday சேவை! தொழில்நுட்பம்

    ஏர் இந்தியா

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு கேரளா
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி இந்தியா
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்

    கேரளா

    மோகன்லாலை தொடர்ந்து, பகத் பாசிலிடம் வருமான வரித்துறையினர் விசாரணை வைரல் செய்தி
    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர் மும்பை
    இந்தியாவின் இளம் வயது உறுப்பு தானர்; தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த 17 வயது கேரளா சிறுமி வைரல் செய்தி
    கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023