விமான சேவைகள்: செய்தி
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும்; பயணிகளுக்கு வருத்தம் தெரிவித்து இண்டிகோ நிறுவனம் அறிக்கை
தொடர்ச்சியாக நான்காவது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், பயணக் கட்டணம் ரத்து மற்றும் மறு அட்டவணைக்கான கட்டணத்தில் முழு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளது.
விமானக் கட்டணத்திற்கு மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்; சந்தர்ப்பவாத விலை குறித்து விமான நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான டிக்கெட்டுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.
இன்று மட்டும் 600க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து; தொடரும் குளறுபடியால் பயணிகள் அவதி
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவில் நிலவும் நெருக்கடி சனிக்கிழமை (டிசம்பர் 6) நான்காவது நாளாக நீடித்தது.
இண்டிகோ கோளாறு: உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் உறுதி
இண்டிகோ விமான நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கின்ஜராபு உறுதியளித்துள்ளார்.
விமானங்கள் ரத்தால் அவதி: பயணிகளின் கூட்டத்தைக் கையாள 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளைச் சேர்த்த ரயில்வே
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ரயில் பயணிகளின் தேவை அதிகரித்துள்ளது.
கண்காணிப்புக்காக 24X7 கட்டுப்பாட்டு அறையை அமைத்த அமைச்சகம்; அனைத்து விமான செயல்பாடுகளும் நள்ளிரவில் சீராகக்கூடும்
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அனைத்து விமான அட்டவணைகளும் சீராகி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் முழு சேவைகளும் நிலைத்தன்மையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இண்டிகோ விமானச் சேவை குழப்பம்: பணம் திரும்ப பெறுவது எப்படி? பயணிகள் அறிய வேண்டிய உரிமைகள்!
விமானிகளின் கடமை நேர வரம்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்களால், இண்டிகோ கடந்த சில நாட்களாக 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்து, நாடு முழுவதும் பெரும் நிதி மற்றும் பயணக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து; சென்னையிலும் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
இண்டிகோ விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கிறது.
குழப்பத்தில் இண்டிகோ விமானச் சேவை: ஒரே நாளில் கிட்டத்தட்ட 600 விமானங்கள் ரத்து
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தொடர்ச்சியான செயல்பாட்டு குறைபாடுகள் காரணமாக, நேற்று (டிசம்பர் 4) மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 550 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமான சேவை: டெல்லி, மும்பை, பெங்களூருவில் பெரும் குழப்பம்
இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோவில் ஏற்பட்ட தொடர் செயல்பாட்டு குழப்பங்களால், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
ஒரே மாதத்தில் 1,232 விமானங்கள் ரத்து செய்த இண்டிகோ; என்ன காரணம்?
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ இந்தாண்டு நவம்பர் மாதம் அதன் செயல்பாட்டில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, கடுமையான கண்காணிப்பு மற்றும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளது.
நள்ளிரவு திடீர் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஏர் இந்தியா விமான சேவை; பல விமானங்கள் தாமதம்
நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2, 2025) இரவு ஏர் இந்தியா விமான சேவைகளின் Check-in செயல்பாடுகளில் கடும் இடையூறு ஏற்பட்டது.
பாதுகாப்பு சான்றிதழ் இன்றி வானில் பறந்த ஏர் இந்தியா விமானம்;ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் ஒன்று, கடந்த நவம்பர் மாதம் முழுவதும், கட்டாய பாதுகாப்பு சான்றிதழான 'Airworthiness Review Certificate - ARC' இல்லாமலேயே பலமுறை இயக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு
ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.
எத்தியோப்பிய எரிமலை எதிரொலி: ஏர் இந்தியா பல விமானங்களை ரத்து செய்தது
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியாவில் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி சாம்பல் மேகங்கள் பரவி வருவதால், விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
எத்தியோப்பிய எரிமலை சாம்பல் டெல்லி வரை பரவியது; விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்து DGCA அறிவிப்பு
எத்தியோப்பியாவின் ஹேலி குப்பி எரிமலை சாம்பல் மேகம் டெல்லியை திங்கள்கிழமை இரவு எட்டியதை தொடர்ந்து, விமான போக்குவரத்துத்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பயணிகளே, இனி அனைத்து எமிரேட்ஸ் விமானங்களிலும் இலவச ஸ்டார்லிங்க் வைஃபை வழங்கப்படும்!
துபாயை தளமாக கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், தனது விமானத்திற்குள் இணைய சேவையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதன்கிழமை வாரணாசிக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு; 300+ விமானங்கள் தாமதம்
தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையத்தில் ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விமானங்கள் தாமதம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(IGIA) விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை விமான நடவடிக்கைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!
விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்
பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
சாகும் வரை தூக்கிலிட்டு கொல்லப்பட்ட கரப்பான் பூச்சி; வைரலாகும் ஏர் இந்தியா விமான பராமரிப்பு பதிவேட்டின் பின்னணி
டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானத்தின் அதிகாரப்பூர்வப் பராமரிப்புப் பதிவேட்டில் பதியப்பட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா நேரடி விமானங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான நேரடி விமான சேவைகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அதிகாரப்பூர்வமாக மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் திரிஷூல் முப்படைப் பயிற்சியால் பீதி; NOTAM வெளியிட்டு வான்வெளியை கட்டுப்படுத்தும் பாகிஸ்தான்
இந்தியா தனது வரவிருக்கும் பெரிய அளவிலான முப்படை கூட்டு ராணுவப் பயிற்சியான திரிஷூலைத் தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் தனது மத்திய மற்றும் தெற்கு வான்வெளியின் பல விமானப் போக்குவரத்து வழித்தடங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான NOTAM (Notice to Airmen) அறிவிப்பை அக்டோபர் 28-29 ஆகிய தேதிகளுக்காக வெளியிட்டுள்ளது.
விமானப் பயிற்சிக்கு தகுதியற்ற சிமுலேட்டர்கள்; இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ₹40 லட்சம் அபராதம் விதித்தது டிஜிசிஏ
இண்டிகோ ஏர்லைன்ஸுக்கு மொத்தம் ₹40 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
லித்தியம் பேட்டரி தீ அபாயம் காரணமாக விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த எமிரேட்ஸ் தடை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு முக்கியமான புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின், அக்டோபர் 26 முதல் இந்தியாவும், சீனாவும் நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளன
இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்தியாவும், சீனாவும் நேரடி விமானங்களை மீண்டும் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
60 வருட கால சேவைக்கு பின்னர் மிக்-21 போர் விமானங்கள் நாளை ஓய்வு பெறுகின்றன; அதன் சிறப்பம்சங்கள்
இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக 60 வருடங்களுக்கும் மேலாக திகழ்ந்த புகழ்பெற்ற ரஷ்ய தயாரிப்பான மிக்-21 (MiG-21) போர் விமானங்கள், இறுதியாக நாளை (செப்டம்பர் 26) இந்திய விமானப்படையிலிருந்து ஓய்வு பெறுகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வான்வெளி தடை அக்டோபர் 24 வரை நீட்டிப்பு
பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் விமானங்கள் மீதான வான்வெளி தடையை அக்டோபர் 24 வரை இந்தியா நீட்டித்துள்ளது.
சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி
2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக போயிங் மீது வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், போயிங் மற்றும் ஹனிவெல்லுக்கு எதிராக டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
2 மணி நேரம் வேர்க்கவேர்க்க விமானத்தில் தவித்த பயணிகள்; இறுதியில் விமான கோளாறு என இறக்கிவிட்ட ஏர் இந்தியா
புதன்கிழமை மாலை டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர்.
விமான இறக்குமதிக்கான விதிகளை தளர்த்தியது டிஜிசிஏ: விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக நடவடிக்கை
விமான விநியோகச் சங்கிலியில் உள்ள சிக்கல்களால் புதிய விமானங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பழைய விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ (DGCA) தனது விதிமுறைகளை மாற்றியமைக்க உள்ளது.
விமான நிலைய சேவைகளில் தாமதமானால் விமான நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (AERA) ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
சீனியர் சிடிஸன்களுக்கு மலிவான விமானக் கட்டணத்தை வழங்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி- NCR இல் பெய்த கனமழையால் 170க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டன
வெள்ளிக்கிழமை காலை டெல்லி-NCR பகுதியில் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாட்ஸ்அப் அடிப்படையிலான போர்டிங் பாஸ்களை ஸ்பைஸ்ஜெட் அறிமுகப்படுத்துகிறது
பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், ஷில்லாங் விமான நிலையத்தில் புதிய காகிதமில்லா போர்டிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகள் போக்குவரத்து அதிகரித்து வந்தாலும் இந்திய விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றன
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது.
விரைவில் ரயிலிலும் விமானத்தை போல லக்கேஜ் கட்டுப்பாடுகள் வரக்கூடும்!
இந்திய ரயில்வே, விமானத்தில் உள்ளதைப் போலவே, ரயில் பயணிகளுக்கும் கடுமையான சாமான்கள் விதிமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது.
விமானிகளுக்கான விமான நேர விதிகளை மீறிய ஏர் இந்தியாவிற்கு டிஜிசிஏ கடும் எச்சரிக்கை
சிவில் விமானப் போக்குவரத்துத் தேவை (சிஏஆர்) வரம்பை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏர் இந்தியா தனது விமானங்களை மறுசீரமைப்பதில் தீவிரமாக இல்லையா?
ஏர் இந்தியா தனது விமான மறுசீரமைப்பு திட்டத்திற்கான காலக்கெடுவை தள்ளி வைத்துள்ளது.
மலேசியாவிலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த சரக்கு விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, அதன் இயந்திரத்தில் தீடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 1 முதல் வாஷிங்டனுக்கான விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு
செயல்பாட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தொடர்ச்சியான விமான மேம்படுத்தல்களின் கலவையை மேற்கோள் காட்டி, ஏர் இந்தியா செப்டம்பர் 1 முதல் டெல்லி-வாஷிங்டன் விமானங்களை நிறுத்துவதாக அறிவித்துளளது.
'ரத்தன் உயிருடன் இருந்திருந்தால்...': AI171 விபத்தில் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து வழக்கறிஞர் வருத்தம்
ஏர் இந்தியா விமானம் AI171 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் கடுமையாக சாடியுள்ளார்.
திக்..திக்..தருணம்! 5 MPக்கள் உட்பட 150 பயணிகளுடன் டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு
ஞாயிற்றுக்கிழமை, காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ஏர் இந்தியா விமானத்தில் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு பயணித்தபோது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார்.
விமானிகளின் ஓய்வு வயதை 58இல் இருந்து 65 ஆக உயர்த்தியது ஏர் இந்தியா
ஏர் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை திருத்தத்தை அறிவித்து, அதன் விமானிகளின் ஓய்வூதிய வயதை 58 இலிருந்து 65 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
டெல்லியில் பெய்த கனமழை: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது
சனிக்கிழமை பெய்த கனமழையால் டெல்லி-என்.சி.ஆர்., பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் முழு சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்குகிறது ஏர் இந்தியா
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விமானம் AI171 இன் துயர விபத்தை அடுத்தது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 1, 2025 முதல் அதன் சர்வதேச விமான சேவைகளை முழுமையாக மீண்டும் தொடங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.