LOADING...
பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது

பாகிஸ்தான் வான்வெளி மூடலால் ஏர் இந்தியாவுக்கு ₹4,000 கோடி இழப்பு: CEO தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 29, 2025
02:56 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து மூடியிருப்பதால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இதுவரை சுமார் ₹4,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வான்வெளியைப் பயன்படுத்துவதில் பரஸ்பரத் தடை அமலில் உள்ளது. பாகிஸ்தானின் இந்தக் கட்டுப்பாடு காரணமாக, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா செல்லும் விமானங்களை வேறு வழிகளில் (Reroute) இயக்க வேண்டிய கட்டாயம் ஏர் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

செலவு

மாற்று வழித்தடத்தினால் செலவு அதிகரிப்பு

இந்த மாற்றத்தினால் ஏர் இந்தியாவின் மிக அதிக இலாபம் ஈட்டும் சர்வதேச வழித்தடங்களான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கான விமானங்களின் பயண நேரம் சராசரியாக 60 முதல் 90 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. வழித்தடத்தை மாற்றியமைத்ததால், விமானங்களுக்கான எரிபொருள் நுகர்வு, பணியாளர்களுக்கான செலவுகள் மற்றும் விமானம் புறப்படுவதற்கு முன் ஆயத்தப் பணிகளுக்கான நேரம் (Turnaround Times) ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளன. அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட சிக்கலான காலகட்டத்தில், பாகிஸ்தானின் இந்த வான்வெளித் தடை ஏர் இந்தியாவின் நிதி மற்றும் செயல்பாட்டுச் சவால்களை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் கேம்ப்பெல் வில்சன் வருத்தத்துடன் தெரிவித்தார்.