LOADING...
இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு
விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு

இண்டிகோ சிக்கல்: விமான போக்குவரத்து துறையில் கூடுதல் நிறுவனங்களுக்கான அழைப்பு விடுத்த மத்திய அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 08, 2025
02:08 pm

செய்தி முன்னோட்டம்

இண்டிகோ விமான சேவையில் சமீபத்தில் ஏற்பட்ட பெருமளவிலான விமான ரத்து மற்றும் தாமதங்கள் குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பாராளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். விமானப் பயண தடைகளை மத்திய அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்று உறுதி அளித்த அமைச்சர், இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்னவென்றும், அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்துப் பேசினார். பெருமளவில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, டிசம்பர் 1-ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில், இண்டிகோ நிறுவனம் எந்தவிதமான பிரச்சினைகளையும் மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தவறு

இண்டிகோ எங்கே தவறிழைத்தது என அமைச்சர் விளக்கம்

இண்டிகோ நிறுவனத்தின் "உள் அமைப்பு முறை" மற்றும் பணியாளர்கள் அட்டவணைத் திட்டமிடலில் ஏற்பட்ட கோளாறுகளே விமான ரத்துக்கான முதன்மைக் காரணம் என்று ராம் மோகன் நாயுடு குற்றம் சாட்டினார். கடந்த மாதம் அமலுக்கு வந்த விமானப் பணி நேர வரம்பு விதிகள் (FDTL) காரணமாகத்தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் நிராகரித்தார். FDTL விதிகள், விமானப் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதற்காகவே கொண்டு வரப்பட்டன என்றும், பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். விமான சேவை நிறுவனங்கள் இந்த விதிகளுக்கு ஏற்பத் தங்கள் செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீர்வு

எதிர்கால நடவடிக்கை மற்றும் தீர்வு

விமான பயணிகளுக்குச் சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், விமானச் சேவைத் துறையில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், இந்தியாவில் கூடுதல் விமானச் சேவை நிறுவனங்கள் களமிறங்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. விமான போக்குவரத்துத் துறையில் போட்டித்தன்மை அதிகரிப்பதன் மூலம், எந்தவொரு ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டுக் குறைபாடும் ஒட்டுமொத்தப் பயணச் சேவையையும் பாதிக்காத வகையில் பயணிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டது.

Advertisement