NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா

    முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 22, 2024
    05:57 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏர் இந்தியா தனது முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை இன்று அறிமுகப்படுத்தியது.

    முதன் முதலாக அந்த விமானம் இன்று பெங்களூரில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்டது.

    மேலும், ஏர் இந்தியா லைவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் விமானமும் இதுவாகும்.

    ஏர் இந்தியா லைவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள AI 589 விமானம் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டு மும்பைக்கு சென்றது.

    அந்த ஏர்பஸ் ஏ350-900 விமானத்தில் புதிய ஏர் இந்தியாவில் பயணிக்க ஆர்வம் இருந்த பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர்.

    முதற்கட்டமாக, A350-900 விமானங்கள், பணியாளர் பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்காக உள்நாட்டு வழித்தடங்களில் மட்டும் பறக்கவிடப்படும்.

    ட்ஜ்கவ் 

    A350-900 விமானத்தின் அம்சங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்

    பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பையிலிருந்து பயணிக்கும் பயணிகள் முதற்கட்டமாக A350 விமானத்தின் அதிநவீன தொழில்நுட்பத்தில் பறக்க முடியும்.

    AI 589 விமானம் செவ்வாய்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயங்க உள்ளது. இந்த பெங்களூரில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு 8:50 மணிக்கு மும்பையை வந்தடையும்.

    ஏர் இந்தியாவின் A350-900 விமானத்தில் 316 இருக்கைகளுடன் கூடிய மூன்று வகுப்பு பயணிகள் கேபின்கள் இருக்கும்.

    28 தனியார் வணிக அறைகள், 24 பிரீமியம் எகானமி இருக்கைகள், 264 எகானமி இருக்கைகள் ஆகியவை இதில் அடங்கும்.

    அது போக, முழு தட்டையான படுக்கைகள், கால் வைப்பதற்கான கூடுதல் இடம் மற்றும் கூடுதல் வசதிகள் இந்த விமானத்தில் இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    இந்தியா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இங்கிலாந்து
    பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு அமெரிக்கா
    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025