டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா!
உலகம் முழுவதும் சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் வேலையை எளிதாக்க சாட்ஜிபிடியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த வகையில், ஏர் இந்தியா நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. சமீபத்தில் தான் ஏர் இந்தியா நிறுவனம் அதிகப்படியான விமானங்களை விலைக்கு வாங்கி இருந்தது. இந்நிலையில், தற்போது ஏர் இந்தியாவின் டிக்கெட் விலையை நிர்ணயிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மட்டும் தற்போது டிரெண்டிங்கில் உள்ள AI சாட்பாட் chatGPT-யை பயன்படுத்த உள்ளது. எனவே இதன்மூலம் டிக்கெட் எடுப்பதற்கான வேலையும், எளிமையானதாக அமையும் எனவும் ஏர் இந்தியா தெரிவிக்கிறது.