NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்
    இந்தியா

    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்

    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2023, 06:26 pm 1 நிமிட வாசிப்பு
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது.

    கோழிக்கோடு கிளம்பிய ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்(DGCA) தெரிவித்துள்ளது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமான நிறுவனம் இன்று(பிப் 3) தெரிவித்தாக, ANI செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சம்பவத்தின் போது, ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 184 பயணிகள் இருந்ததாக DGCA தெரிவித்துள்ளது. இந்திய விமானங்களில் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் சேர்க்கப்பட்டுள்ளது. முக்கியமாக, நவம்பர் மாதம் ஏர்-இந்தியா விமானத்தில் குடிபோதையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர்மிஸ்ரா என்ற நபர் வயதான சகபயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு

    "புறப்பட்டு 1,000 அடி உயரத்தில், ஒரு இன்ஜினில் தீப்பிடித்ததைக் கண்டறிந்த கேப்டன், மீண்டும் அபுதாபி விமான நிலையத்திற்குச் செல்ல முடிவு செய்தார்" என்று விமான அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான ANI இடம் தெரிவித்துள்ளார். பின்னர், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800 விமானம் யு-டர்ன் செய்து மீண்டும் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்று இந்தியாவின் சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டரும் தெரிவித்திருக்கிறார். ஜனவரி 23அன்று திருவனந்தபுரம்-மஸ்கட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் புறப்பட்ட 45 நிமிடங்களில் தரையிறங்கிய சம்பவம் நடந்த சில வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இதே விமான நிறுவனத்தின் துபாய் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்
    ஏர் இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்

    விமானம்

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    62 வயதில் முதல்முறை விமான பயணம் - யூடியூபரின் சுவாரஸ்ய கதை! வைரலான ட்வீட்
    விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம் மன ஆரோக்கியம்

    விமான சேவைகள்

    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்திற்காக அவசரநிலை பிரகடனம்: என்ன நடந்தது இந்தியா
    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை அறிவிப்பு கேரளா
    பெண்ணின் இருக்கை மீது சிறுநீர் கழித்த பேருந்து பயணி இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023