Loading...
பாரதத் தாயை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து; பாடலுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

பாரதத் தாயை போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து; பாடலுக்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
11:38 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் அளிப்பது குறித்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரிகளுக்குப் பின்னணியில் உள்ள ஆழமான பொருளையும், அது பாரதத் தாயை போற்றும் விதத்தையும் சுட்டிக்காட்டி பேசினார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

தமிழ்

பாரதத் தாயின் நெற்றியாகவும் திலகமாகவும் விளங்கும் தமிழ்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் பாரதக் கண்டத்தை ஒரு தாயாக உருவகப்படுத்தி, அதற்குத் திலகமாகத் தமிழ் நிலம் திகழ்கிறது என்பதை மனோன்மணீயம் சுந்தரனார் மிக அழகாகக் கவிதையாக்கியுள்ளார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை' எனத் தொடங்கி பின்னர் பாரதத் தாயின் முக அழகையும், அவரது நெற்றியில் இடும் மணமிக்க திலகமாகத் தக்காண நிலமும் அதன் நறுமணமாகத் தமிழ் மொழியும் விளங்குகிறது என்ற பாடலின் பொருளை அவர் சட்டப்பேரவையில் விளக்கினார்.

தாய் மொழி

தாய் மொழியையே பெயராக சூட்டும் தமிழர்களின் பெருமை

உலகில் உள்ள பல்வேறு தேசிய இனத்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய்மொழியில் பெயர் வைப்பார்கள் என்றும், ஆனால் தாய்மொழியையே தங்கள் சொந்தக் குழந்தையின் பெயராக சூட்டி அழகு பார்க்கும் ஒரே இனம் தமிழ் இனம் தான் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழியை வாழ்த்துவதுடன், அகில உலகத்திற்கும் பெருமை சேர்க்கும் உலகத் தாய் வாழ்த்தாகவும் திகழ்கிறது என்று அமைச்சர் ராஜ்மோகன் தனது உரையை நிறைவு செய்தார்.

இதற்கிடையே, முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT