NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடு வானில்  எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்
    சம்பத்தின் போது கிட்டத்தட்ட 300 பயணிகள் விமானத்தில் (AI106) இருந்தனர்

    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 22, 2023
    12:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று(பிப் 22) நெவார்க்கில்(அமெரிக்கா) இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் எண்ணெய் கசிவு காரணமாக, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் பாதியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    சம்பத்தின் போது கிட்டத்தட்ட 300 பயணிகள் விமானத்தில் (AI106) இருந்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

    நியூ ஜெர்சியின் நெவார்க்கில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதால் அவசரமாக ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமுக்கு திருப்பி விடப்பட்டது.

    விமானத்தின் எஞ்சின் ஒன்றில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டதாக சிவில் ஏவியேஷன் மூத்த இயக்குனரக(டிஜிசிஏ) அதிகாரி PTIயிடம் தெரிவித்தார்.

    "எண்ணெய் கசிவு காரணமாக என்ஜின் நிறுத்தப்பட்டவுடன், விமானம் பாதுகாப்பாக ஸ்டாக்ஹோமில் தரையிறக்கப்பட்டது," என்று அவர் கூறியுள்ளார்.

    அவசரமாக தரையிறக்கப்பட்ட பிறகு, நிபுணர்கள் குழு விமானத்தை ஆய்வு செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    அமெரிக்கா

    தொடர்ந்து பிரச்சனையில் சிக்கி வரும் ஏர் இந்தியா விமானங்கள்

    இந்திய விமானங்களில் தொடர்ந்து நடந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பட்டியலில் தற்போது இந்த சம்பவமும் சேர்க்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக, நவம்பர் மாதம் ஏர்-இந்தியா விமானத்தில் குடிபோதையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்ற நபர் வயதான சகபயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

    ஜனவரி 23 அன்று திருவனந்தபுரம்-மஸ்கட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் புறப்பட்ட 45 நிமிடங்களில் தரையிறங்கிய சம்பவம் நடந்த சில வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

    மேலும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டதால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம் அபுதாபி விமான நிலையத்திற்கு திரும்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஏர் இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெல்லி

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் குடியரசு தினம்
    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு உச்ச நீதிமன்றம்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்

    விமானம்

    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமான சேவைகள்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்
    கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார் கொரோனா
    இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு இந்தியா

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    'நான் ஒன்னும் உங்கள் வேலைக்காரி இல்லை'-ஆத்திரத்தில் கத்திய விமான பணிப்பெண் உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025