NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம் 
    இன்று மதியம் 1 மணிக்கு நிவாரண விமானம் புறப்படும்

    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 07, 2023
    12:34 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை வெளியேற்ற இருந்த மாற்று விமானம் இன்று(ஜூன் 7) தாமதமானது.

    ஏர் இந்தியா அதிகாரிகள் விமானத்தை இயக்குவதற்கான ஒழுங்குமுறை சிக்கல்களில் ஈடுபட்டுள்ளதால் இந்த மாற்று விமானம் தாமதமானதாக கூறப்படுகிறது.

    புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(ஏஐ173), இன்ஜின் கோளாறு காரணமாக,நேற்று ரஷ்யாவின் மகதான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 10,000 கிமீ தொலைவில் உள்ள மகதானில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா பயணிகள் தற்போது ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மகதானில் சிக்கித் தவிக்கும் பயணிகளின் நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

    details

    விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை: அமெரிக்கா 

    ரஷ்யாவில் சிக்கித் தவிக்கும் பயணிகளை மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு அழைத்துச் செல்ல மும்பையில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு நிவாரண விமானம் புறப்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "அமெரிக்கா செல்லும் விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில் விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று அமெரிக்க அரசு துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா மற்றும் ரஷ்யா எதிரி நாடுகள் என்பதால் இதன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா நேற்று தெரிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஏர் இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 200 இந்திய மீனவர்கள் விடுதலை  பாகிஸ்தான்
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  உயர்நீதிமன்றம்
    ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு பிரதமர் மோடி
    வெளிநாட்டில் இருக்கும் மகன்/மகளுக்கு பணம் அனுப்புவது எப்படி? இந்தியா

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    விமானம்

    கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம் விமான சேவைகள்
    விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: புதிய மது கட்டுப்பாடுகளை அறிவித்தது ஏர் இந்தியா இந்தியா
    'கோ பர்ஸ்ட்' விமானம் : பயணிகளை ஏற்றாமல் விட்டுச்சென்றதற்காக ரூ.10 லட்சம் அபராதம் இந்தியா
    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானப்படை

    விமான சேவைகள்

    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025