NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!
    கூடுதல் இடைநில்லா விமான சேவைகள், ஏர் இந்தியா அறிவிப்பு

    மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 27, 2023
    10:21 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸூடனான பிணைய சீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக இதனை அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா.

    இதனைத் தொடர்ந்து தற்போது தினசரி டெல்லி மற்றும் துபாய் இடையே 10 மடங்கும் மற்றும் மும்பை துபாய் இடையே 6 மடங்கு அதிக விமானங்களையும் இயக்கி வருகிறது ஏர் இந்தியா.

    அதாவது, இரு வழித்தடங்களிலும் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தினசரி 8 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது.

    தூபாய்க்கு இயக்கப்பட்டு வரும் விமானங்களில் ஏர் இந்தியாவின் ட்வின் ஏய்ல் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானங்களும், ஏர்பஸ் A320/A321 ரக விமானங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியாவின் திட்டம்: 

    69 வருடங்கள் இந்திய அரசின் கீழ் இருந்துவிட்டு, கடந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் டாடா நிறுவனத்திடம் வந்து சேர்ந்தன ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனங்கள்.

    உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது அந்நிறுவனம்.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான சேவை நிறுவனங்களையும் ஏர் இந்தியாவின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து தற்போது மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது ஏர் இந்தியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    விமான சேவைகள்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்

    இந்தியா

    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா
    இளம்பெண்ணுடன் சேர்ந்து க்யூட்டாக நடனமாடிய யானை - வைரல் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  வெளியுறவுத்துறை
    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025