வணிக செய்தி
இந்தியாவின் சேவைகள் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது
இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி டிசம்பரில் 11 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக S&P Global நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா; உலக அரிசி ராஜாவாக மகுடம் சூடி சாதனை
உலகிலேயே அதிக அளவு அரிசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
டெலிவரி பார்ட்னர்கள் உண்மையில் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? ஜொமேட்டோ, ஸ்விக்கியின் வருமான விவரங்கள் குறித்த ஆய்வு சொல்வது இதுதான்
ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு விநியோக நிறுவனங்களில் பணிபுரியும் 'கிக் ஒர்க்கர்ஸ்' (Gig Workers) எனப்படும் டெலிவரி பார்ட்னர்களின் வருமானம் என்பது அவர்கள் உழைக்கும் நேரம் மற்றும் அவர்கள் பணியாற்றும் நகரத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு: ரஷ்யாவிடமிருந்து வாங்குவது குறைந்ததா?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பர் மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ரஷ்யா மீதான சர்வதேசக் கட்டுப்பாடுகளையும் மீறி, இந்தியா அங்கிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து வருகிறது.
வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட விலை; இந்த நேரத்தில் வெள்ளி வாங்குவது நல்லதா?
இந்தியாவில் வெள்ளி விலை திங்கட்கிழமை (டிசம்பர் 29) புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 688.94 பில்லியன் டாலராக உயர்வு; தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது.
சரிவிலிருந்து மீண்ட ரூபாய்: மீண்டும் வலுவான நிலைக்குத் திரும்புமா?
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வந்தது.
தமிழகத்தின் அடையாளமான 'உதயம்' பிராண்டை வாங்கியது ரிலையன்ஸ்
தமிழகத்தின் சமையலறைகளில் நீங்கா இடம்பெற்றுள்ள 'உதயம்' (Udhaiyam) பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் பிராண்டை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
கேஷுவல் லீவு, ஸிக் லீவு எல்லாம் கிடையாது..நிறுவனத்தின் வினோத கட்டுப்பாடுகளை வெளிப்படுத்திய ஊழியர்
ஒரு நிறுவனம் நிர்வாகம், கேஷுவல் மற்றும் சிக் லீவ் உரிமைகளை ரத்து செய்துவிட்டதாக ஒரு ஊழியர் கூறியதை அடுத்து அது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக எதிர்மறையாகவே பணவீக்கம் நீடிப்பு: மத்திய அரசு தரவுகள் வெளியீடு
இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு (WPI) அடிப்படையிலானப் பணவீக்கம், நவம்பர் 2025 மாதத்திலும் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக எதிர்மறை மண்டலத்திலேயே நீடித்தது.
உலகின் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக மாறியது இந்தியா
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (BCG) இன் புதிய அறிக்கையின்படி, உலகளவில் மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்திய ரூபாயின் வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு ₹90.52 ஆக குறைந்தது
இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வர்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக 90.52 என்ற புதிய வரலாற்றுக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது.
ஐடி பணியாளர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் முதலீட்டு வங்கிகள்; ஆய்வில் வெளியான தகவல்
இந்தியாவில் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு (BFSI) துறையில் அதிக சம்பளம் வழங்கும் முதலாளிகளாக, முதலீட்டு வங்கியின் குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs) உள்ளன என்று கேரியர்நெட் நிறுவனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி 26,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு! சரிவுக்கு காரணம் என்ன?
இந்தியப் பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (டிசம்பர் 8) ஒரு சதவீதம் வரை சரிந்து காணப்பட்டன.
நாளை முதல் இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மாற்றம்; வர்த்தகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியப் பங்குச் சந்தையில், திங்கட்கிழமை (டிசம்பர் 8) முதல் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் எஃப்&ஓ (Equity Derivatives - F&O) பிரிவுக்கு முன்-திறப்பு அமர்வு (Pre-open Session) என்ற ஒரு முக்கியமான புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
மகிழ்ச்சியான அறிவிப்பு: வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு
மாதாந்திர விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக, வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு $688.10 பில்லியனாக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 21 உடன் முடிவடைந்த வாரத்தில் $4.47 பில்லியன் குறைந்து, அதன் மொத்த மதிப்பு $688.10 பில்லியனாக நிலைபெற்றுள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
கடன் பெற்றுள்ளவர்களுக்கு நல்ல செய்தி: கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்
இந்தியாவில் கடன் பெறுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோரை (Credit Score) இனிமேல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.
₹22,000 விலையில் ஹைடெக் GT6 ஸ்மார்ட்வாட்ச்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது HUAWEI
HUAWEI தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச்களான GT6 மற்றும் GT6 Pro-வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தில் அடிப்படைச் சம்பளம் 50% கட்டாயம்; Take Home சம்பளம் குறைய வாய்ப்பு?
இந்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் ஒரு அங்கமாக ஊதியக் குறியீட்டுச் சட்டம் (Code on Wages) அமலுக்கு வருவதன் காரணமாக, ஊழியர்களின் சம்பள அமைப்பில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
அமெரிக்கத் தடைக்குப் பின் ரஷ்யாவின் யுரல்ஸ் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு அதிக தள்ளுபடியில் விற்பனை
ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூக்கோயில் (Lukoil) மீது அமெரிக்கா விதித்த தடைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் யுரல்ஸ் (Urals) கச்சா எண்ணெய் இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கு: டிசிஎஸ்ஸிற்கு $194 மில்லியன் அபராதத்தை உறுதி செய்த அமெரிக்க நீதிமன்றம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திற்கு எதிராக DXC டெக்னாலஜி தொடர்ந்த வர்த்தக ரகசியங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், அமெரிக்காவின் ஐந்தாவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Fifth Circuit Court of Appeals) $194 மில்லியன் (சுமார் ₹1,618 கோடி) இழப்பீட்டை நவம்பர் 21 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை: ஏற்றுமதிக்கான சுத்திகரிப்பில் ரஷ்ய கச்சா எண்ணையை முழுவதும் நிறுத்திய ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனது ஏற்றுமதிக்காக மட்டுமே செயல்படும் (SEZ) சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய கச்சா எண்ணையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 20) அறிவித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு கடும் சரிவு: அக்டோபர் உச்சத்தில் இருந்து $93,000 ஆக வீழ்ச்சி ஏன்?
கடந்த அக்டோபரில் $1,26,000 என்ற உச்சத்தைத் தொட்ட உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin), ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார்.
அக்டோபர் மாதத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்காத இந்தியா; தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிப்பு
உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம்; 2025இல் இந்தியாவின் 7% ஜிடிபி வளர்ச்சி தொடரும் என மூடிஸ் அறிக்கை
உறுதியான உட்கட்டமைப்புச் செலவினம் (infrastructure spending) மற்றும் உள்நாட்டு நுகர்வு (household consumption) ஆகியவற்றின் வலிமையால், உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மூடிஸ் ரேட்டிங்ஸ் தனது சமீபத்திய 'குளோபல் மேக்ரோ அவுட்லுக்' அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-செப்டம்பர் 2025: இந்தியத் துணி ஏற்றுமதி 111 நாடுகளுக்கு 10% வளர்ச்சியை பதிவு செய்து அசத்தல்
உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் முக்கியச் சந்தைகளில் நிலவும் வரி சார்ந்த தடைகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் துணி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நடிகர் அஜித்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டு; அஜித் குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஆனது காம்பா எனர்ஜி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL), நடிகர் மற்றும் பந்தய வீரரான அஜித்குமார் நிறுவிய அஜித் குமார் ரேசிங் அணியுடன் ஒரு முக்கிய மூலோபாய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
'அமைதியாகப் போகிறேன்': பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு Warren buffet இறுதிக் கடிதம்
பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட், வருடாந்திர பங்குதாரர் கடிதங்களை எழுதுவதிலிருந்தும், பொதுவில் தோன்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிப்பு; காரணம் இதுதான்
வரும் வாரத்தில் அமெரிக்காவின் முக்கியமான பணவீக்கத் தரவுகள் வெளியிடப்படும் வரை தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இப்போதை நிலையிலேயே நீடிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புதிய அத்தியாயம்; ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைனுடன் வர்த்தக ஒப்பந்தந்தை இறுதி செய்வதில் இந்தியா தீவிரம்
இந்தியா, சர்வதேச வர்த்தக உறவுகளை ஆழமாக்கும் நோக்கில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு மேலும் $5.6 பில்லியன் சரிவு; ஆர்பிஐ தகவல்
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, அக்டோபர் 31, 2025 இல் முடிவடைந்த வாரத்தில் $5.6 பில்லியன் சரிந்து, $689.73 பில்லியன் என்ற அளவில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.
சர்ச்சையில் டாடா குழும அறக்கட்டளைகள்: மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையத்தில் கேவியட் மனு
டாடா அறக்கட்டளைகளின் அறங்காவலராக மீண்டும் நியமிக்கப்படுவது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மஹ்லி மிஸ்ட்ரி மும்பை அறக்கட்டளை ஆணையரிடம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவிழாக் கால விற்பனை உச்சம்: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் குறைந்த பணவீக்கத்தால் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் திருவிழாக் காலத்தில் நுகர்வு மற்றும் செலவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சீனாவின் ரேர் எர்த் காந்த இறக்குமதிக்கு நான்கு இந்திய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியது மத்திய அரசு
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு நீண்ட நாட்களாக இருந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சீனாவிடமிருந்து முக்கியமான ரேர் எர்த் காந்தங்களை (Rare Earth magnets) நேரடியாக இறக்குமதி செய்ய நான்கு உள்நாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு முதல் உரிமங்களை வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு மட்டும் ஐந்து; மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
வோடஃபோன் ஐடியாவுக்கு நிம்மதி; AGR நிலுவைத் தொகையைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (AGR) நிலுவைத் தொகையின் ஒரு பகுதியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய திங்கட்கிழமை (அக்டோபர் 27) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா ஐபிஓ பங்கு வெளியீடு; முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பாளரான எம்டிஆர் உணவுகள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்க்லா இந்தியா (Orkla India), தனது தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) அக்டோபர் 29, 2025, புதன்கிழமை அன்று ஏலத்திற்காகத் தொடங்க உள்ளது. இந்த ஐபிஓவின் மதிப்பு ₹1,667.54 கோடி ஆகும்.
நிதி ஆதாரங்களைப் பலப்படுத்த ₹1,500 கோடி திரட்ட ஓலா எலக்ட்ரிக் இயக்குனர் குழு ஒப்புதல்
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் இயக்குனர் குழு, பல்வேறு பத்திரங்களை வெளியிட்டு ₹1,500 கோடி வரை திரட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதானி முதலீடுகள் குறித்த வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது எல்ஐசி
அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையை, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நிராகரித்துள்ளது.
டாடா அறக்கட்டளையில் டிவிஎஸ் கௌரவ தலைவர் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்
டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம் செய்துள்ளது.
தீபாவளி போனஸாக ஸ்கார்பியோ எஸ்யூவி கார்கள்; ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தொழிலதிபர்
சண்டிகரைச் சேர்ந்த எம்ஐடிஎஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான எம்.கே.பாட்டியா, இந்தத் தீபாவளி போனஸாகத் தனது ஊழியர்களுக்கு 51 சொகுசு ஸ்கார்பியோ எஸ்யூவி கார்களைப் பரிசளித்து, ஊழியர்களையும் சமூக ஊடகப் பயனர்களையும் திகைப்பில் ஆழ்த்தினார்.