மத்திய அரசு: செய்தி
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி; இபிஎஃப்ஓ 3.0 விரைவில் அறிமுகம் என தகவல்
மத்திய அரசு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்களுக்கு நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியை அதிகரிக்கும் நோக்கில் விரிவான இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை அமல்படுத்த தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை என்ன?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்து குடியுரிமை உள்ளதாக தொடரப்பட்ட மனு மீது மத்திய அரசு முடிவெடுக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஒருங்கிணைப்புக்காக PAN 2.0 ஐ அறிமுகம் செய்கிறது மத்திய அரசு
இந்திய அரசாங்கம் PAN 2.0 ஐ அறிவித்துள்ளது. இது பான் கார்டு எண்ணின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும்.
அரசியலமைப்பு தினம் 2024: இரண்டு மாதங்கள் தாமதமாக அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது ஏன்?
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் எனப்படும் சம்விதன் திவாஸை கொண்டாடி வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் 317% அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
இந்தியாவில் ₹500 கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளில் 853 ஐஆர்எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு பெற்றதாக மத்திய அரசு தகவல்
கடந்த பத்தாண்டுகளில், 853 இந்திய வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரிகள் தன்னார்வ ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) தேர்ந்தெடுத்துள்ளனர் என்று திங்களன்று (நவம்பர் 25) மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்திற்கான அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது மத்திய அரசு; முக்கிய மசோதாக்களின் பட்டியல்
வரும் நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதிக்க மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
மொபைல் உதிரிபாகங்களை உள்ளூரில் உற்பத்தி செய்ய 5 மில்லியன் டாலர் ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு திட்டம்
மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் வரையிலான கேட்ஜெட்டுகளுக்கான பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க நிறுவனங்களுக்கு இந்தியா $5 பில்லியன் வரை ஊக்கத்தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
17 ஆயிரம் மோசடி வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மத்திய அரசு
ஆன்லைன் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட கிட்டதட்ட 17 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.
தனியார் ஓடிடி நிறுவனங்களுக்கு போட்டி; வேவ்ஸ் என்ற புதிய ஓடிடியை அறிமுகம் செய்தது பிரசார் பாரதி
இந்தியாவின் மத்திய அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான வேவ்ஸ்'ஐ (WAVES) கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) வெளியிட்டது.
பிரதமரின் இ-டிரைவ் திட்டம்: மின்சார 3 சக்கர வாகனங்களுக்கான மானியங்களை மத்திய அரசு மீண்டும் வழங்குகிறது
கனரக தொழில்துறை அமைச்சகம் (MHI) PM E-Drive திட்டத்தின் கீழ் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கியுள்ளது.
காப்பீட்டு சேவைகள் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு
டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, 100% அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அனுமதிப்பது உட்பட, காப்பீட்டுத் துறையில் பெரிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பத்திரிக்கை தினம் 2024: ஊடக சவால்கள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்கள் குறித்து உரையாற்றினார்.
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க; பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024க்கான பதிவு காலக்கெடுவை நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது.
இனி மோசடி அழைப்புகளை தெரிந்துகொள்ள தனி செயலி தேவையில்லை; இது மட்டும் போதும்
அதிகரித்து வரும் அழைப்பு தொடர்பான மோசடிகள் தொடர்பான அதிகரிப்புக்கான சமீபத்திய நடவடிக்கையில், வங்கிகளில் இருந்து வரும் அனைத்து அதிகாரப்பூர்வ அழைப்புகளும் இனி 160 என்ற முன்னொட்டுடன் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சார்பு மற்றும் தவறான புகார்கள் தொடர்பாக விக்கிபீடியாவிற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு
மத்திய அரசு விக்கிப்பீடியாவிற்கு முறையான நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு: நெறிமுறைகள் மற்றும் கருப்பொருளை வெளியிட்ட மத்திய அரசு
2025 குடியரசு தின அணிவகுப்புக்கான தீம் 'ஸ்வர்னிம் பாரத்: விராசத் அவுர் விகாஸ்.' இது இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த ஒரு முயற்சியாகும்.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரிப்பு; மத்திய நிதியமைச்சகம் தகவல்
மத்திய நிதி அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபரில் ரூ. 1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15 வரை நீட்டிப்பு; மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) மதிப்பீட்டு ஆண்டு (AY) 2024-25 க்கான கார்ப்பரேட் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 15, 2024 வரை நீட்டித்துள்ளது.
முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் தொழில் முனைவோருக்கு ஆதரவாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
விண்வெளி ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுமார் 40 விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் ரூ.1,000 கோடி வென்ச்சர் கேபிடல் ஃபண்டிற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை (அக்டோபர் 24) ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், தேர்வு சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க, மத்திய அரசு நியமித்த ஏழு பேர் கொண்ட நிபுணர் குழுவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை இரண்டு வார கால நீட்டிப்பு வழங்கியது.
தேசிய மகளிர் ஆணையத்திற்கு புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் நியமனம்
தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக விஜய கிஷோர் ரஹத்கர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்; லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிநபர் கணினிகளின் இறக்குமதியை 2025 ஜனவரி மாதத்திற்குப் பிறகு கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா- கனடா உறவு பாதிப்பிற்கு ட்ரூடோ தான் காரணம் என விளாசிய வெளியுறவுத்துறை
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விசாரணைக் குழுவின் அளித்த வாக்குமூலத்திற்கு பின்னர், தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.
தீபாவளியை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஜாக்பாட்; ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியது மத்திய அரசு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஆறு முக்கிய ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
புரளி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப்பவர்கள் 'no-fly' லிஸ்டில் சேர்க்கப்படுவார்கள்: மத்திய அரசு அதிரடி
அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டிய பல அறிக்கைகளின்படி, விமானங்களுக்கு எதிரான வெடிகுண்டு மிரட்டலுக்கான புரளி அச்சுறுத்தல்கள் விடுப்பவர்கள், 'no-fly' என்ற பட்டியலில் சேர்க்க மத்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அகவிலைப்படியை (DA) 3% உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுமக்களிடையே எத்தனால், ஃப்ளெக்ஸ் எரிபொருட்களை ஊக்குவிக்க வேண்டும்: கட்காரி வேண்டுகோள்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் மற்றும் ஃப்ளெக்ஸ் எரிபொருட்களை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தை (SIAM) வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் 14வது மகாரத்னா நிறுவனமாக மாறியது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்; மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய அரசாங்கத்தால் மஹாரத்னா நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க
இந்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குகிறது.
பிரதமர் கதிசக்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரை
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளரான அமர்தீப் சிங் பாட்டியா, பிரதமர் கதிசக்தி முன்முயற்சியின் கீழ் மொத்தம் ₹15.39 லட்சம் கோடி மதிப்பிலான 208 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
17,082 கோடி மதிப்பிலான செறிவூட்டப்பட்ட அரிசிக்கான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்துத் திட்டங்களின் கீழும் செறிவூட்டப்பட்ட அரிசியை அனைவருக்கும் ஜூலை முதல் வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.