NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
    எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்

    வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 04, 2024
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியக் குழுவை ஜெய்சங்கர் வழிநடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.

    முன்னதாக, இந்த மாதம் திட்டமிடப்பட்ட எஸ்சிஓ கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு அனுப்பியதை ஆகஸ்ட் மாதம் அமைச்சகம் உறுதி செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது.

    எஸ்சிஓ

    எஸ்சிஓ அமைப்பின் தலைவரான உள்ள பாகிஸ்தான்

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சிலின் சுழற்சித் தலைவராக பாகிஸ்தான் தற்போது உள்ளது.

    அதையொட்டி, அக்டோபரில் இரண்டு நாள் எஸ்சிஓ அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளது.

    பாகிஸ்தானில் எஸ்சிஓ நிகழ்வுக்கு முன்னதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நிதி, பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சாரம் தொடர்பான பல்வேறு கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    முன்னதாக கடந்த ஜூலை 3-4 தேதிகளில் கஜகஸ்தானில் நடந்த எஸ்சிஓ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணித்துவிட்டு, ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்திலும், இந்திய குழு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எஸ்.ஜெய்சங்கர்
    வெளியுறவுத்துறை
    இந்தியா
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா

    வெளியுறவுத்துறை

    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்  இஸ்ரேல்
    41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    இந்தியா

    அக்னிவீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதாக பிரம்மோஸ் நிறுவனம் அறிவிப்பு தொழில்நுட்பம்
    போஸ்ட் ஆபீசில் கணக்கு வைத்துள்ளீர்களா? அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் நிதித்துறை
    நாடு முழுவதும் 1 லட்சம் மெக்கானிக்களுக்கு பயிற்சியளிக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டம் ஓலா
    உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா உலகம்

    மத்திய அரசு

    எரிபொருள் விலையை குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது வணிகம்
    ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு ஆந்திரா
    குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம் குரங்கம்மை
    54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பில் புதிய முடிவு ஜிஎஸ்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025