NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / 100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்
    100 நாள் வேலைத்திட்ட நாட்கள் குறைக்கப்பட்டதாக வந்த புகாருக்கு மத்திய அரசு மறுப்பு

    100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 27, 2024
    07:12 pm

    செய்தி முன்னோட்டம்

    நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு 16 சதவீதம் குறைந்துள்ளது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது.

    மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 (100 நாள் வேலைத் திட்டம்) நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு உத்தரவாதமான கூலி வேலை வழங்க வேண்டும்.

    அறிக்கை

    ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிக்கை

    ஊரக வளர்ச்சி அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு:-

    நூறு நாள் வேலைத் திட்டத்தில் 2006-07 நிதியாண்டு முதல் 2013-14 நிதியாண்டு வரையிலான மொத்த நபர் நாட்கள் 1660 கோடியாக இருந்தது.

    அதேசமயம், 2014-15 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான மொத்த நபர் நாட்கள் 2923 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த திட்டம் ஒரு தேவை உந்துதல் திட்டமாக இருப்பதாலும், நடப்பு நிதியாண்டு இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், நபர்களின் நாட்களை உருவாக்குவதற்கான சரியான இலக்கை நிர்ணயிக்க முடியாது.

    இருப்பினும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவை அனுப்பலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம்

    ஊதியம் குறைப்பு புகாருக்கு மறுப்பு

    100 நாள் வேலைத்திட்டத்திற்கான பட்ஜெட் மற்றும் தொழிலாளர்களின் ஊதியம் தொடர்ந்து குறைக்கப்படுகிறது என்று கூறுவது தவறான மதிப்பீடாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    திட்டத்திற்கான பட்ஜெட் மதிப்பீடு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 2013-14 நிதியாண்டில், பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 33,000 கோடியாக இருந்தது.

    இது நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ. 86,000 கோடியாக இருந்தது. இது தொடக்கத்தில் இருந்தே மிக அதிகமாகும்.

    மேலும், 2024-25 நிதியாண்டில் குறைந்தபட்ச சராசரி அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்ற முறையில் ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து

    மத்திய அரசு

    இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வங்கிகளின் முக்கியத்துவம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இந்தியா
    தடுப்பூசி நிர்வாகத்தை எளிமையாக்கும் U-WIN டிஜிட்டல் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி; ஜேபி நட்டா அறிவிப்பு சுகாதாரத் துறை
    சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல் உயர்நீதிமன்றம்

    இந்தியா

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு கனடா
    மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள்; அதிபர் முகமது முய்சு முக்கிய முடிவு மாலத்தீவு
    நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு நீட் தேர்வு
    இந்தியா vs சீனா: LAC அருகே ரோந்து செல்ல உடன்பாடு எட்டப்பட்டது இந்தியா-சீனா மோதல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025