NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்
    ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்

    விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த தலைமையகத்தின் கீழ் பாதுகாப்பு விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தால் கையாளப்படுகிறது.

    இந்த ஒப்புதல் குறித்து மத்திய அரசு மௌனம் சாதித்தாலும், சிசிஎஸ் அனுமதித்துள்ள திட்டத்தில் குறைந்தபட்சம் 52 செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் மற்றும் புவிசார் சுற்றுப்பாதையில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இந்த திட்டத்தில் ரூ. 26,968 கோடி செலவில், 21 செயற்கைக்கோள்களை இஸ்ரோவும், மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை தனியார் நிறுவனங்களும் உருவாக்கி விண்ணில் செலுத்த உள்ளன.

    எஸ்பிஎஸ் திட்டம்

    எஸ்பிஎஸ் திட்டத்தின் பின்னணி

    எஸ்பிஎஸ் திட்டத்தின் முதற்கட்டம் ஆனது 2001ஆம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.

    மேலும் கார்டோசாட் 2ஏ, கார்டோசாட் 2பி, ஈரோஸ் பி மற்றும் ரிசாட் 2 ஆகிய நான்கு செயற்கைக்கோள்களை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தியது.

    எஸ்பிஎஸ் 2 ஆனது 2013ஆம் ஆண்டில் ஆறு செயற்கைக்கோள்களான கார்டோசாட் 2சி, கார்டோசாட் 2டி, கார்டோசாட் 3ஏ, கார்டோசாட் 3பி, மைக்ரோசாட் 1 மற்றும் ரிசாட் 2ஏ ஆகியவற்றை விண்ணில் செலுத்தியது.

    இந்நிலையில், தற்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள எஸ்பிஎஸ் 3, அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என்பதைக் காட்டுகிறது.

    இதில் இந்தியாவின் முப்படைகளும் தங்கள் நிலம், கடல் அல்லது வான் சார்ந்த பணிகளுக்காக பிரத்யேக செயற்கைக்கோள்களைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

    செயற்கைக்கோள் எதிர்ப்பு

    செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

    இராணுவ செயற்கைக்கோள்களின் கூட்டு கட்டுமானம் மற்றும் ஏவுதலுக்கான ஒப்பந்தக் கடிதத்தில், மோடி அரசாங்கம் ஏற்கனவே ஜனவரி மாதம் கையெழுத்திட்டுள்ளது.

    இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் திறன்களைப் பெறுவது மற்றும் அதன் உள்கட்டமைப்பு கட்டுமானங்களைக் கண்காணிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இதன் மூலம் இந்தியாவுடனான தரை மற்றும் கடல் எல்லையில் உள்ள எதிரிகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும். எஸ்பிஎஸ் 3 பணிக்கு, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 31 பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியா வாங்குவதும் உதவும்.

    முன்னதாக, மார்ச் 29, 2019 அன்று ஒரு இந்திய ஏவுகணை சுற்றுப்பாதையில் ஒரு நேரடி செயற்கைக்கோளை அழித்தபோது, ​​இந்தியா தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன்களை உலகிற்கு வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    செயற்கைகோள்
    மத்திய அரசு
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானம் $2,000 உயரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு நிர்மலா சீதாராமன்
     எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் அதிகரிக்கும் உள்கட்டமைப்புகள்: விமானப்படை தளபதி எச்சரிக்கை இந்தியா-சீனா மோதல்
    எஸ்சிஓ உச்சி மாநாட்டில் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறாது: ஜெய்சங்கர் திட்டவட்டம் எஸ்.ஜெய்சங்கர்
    பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள் மேற்கு வங்காளம்

    செயற்கைகோள்

    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ ஜியோ

    மத்திய அரசு

    குரங்கம்மை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம் குரங்கம்மை
    54வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு ஒப்பந்தங்களுக்கான வரிவிதிப்பில் புதிய முடிவு ஜிஎஸ்டி
    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம் சைபர் கிரைம்
    விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு விவசாயிகள்

    தொழில்நுட்பம்

    ஃபின்டெக் துறையில் 500 சதவீத வளர்ச்சி கண்ட ஸ்டார்ட்அப்; பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    எஸ்எம்எஸ் மோசடியை தடுக்கும் உத்தரவை செயல்படுத்தும் காலக்கெடு ஒரு மாதம் நீட்டிப்பு இந்தியா
    பொருளாதார காரணங்களால் 27 ஆண்டுகால சேவையை முடித்துக் கொண்டது ஆனந்த்டெக் பத்திரிகை தொழில்நுட்பம்
    14.96 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஆகஸ்ட் மாதத்தில் புதிய உச்சம் தொட்டது இந்தியா யுபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025