NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு
    முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு

    முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு இரண்டு மடங்காக உயர்வு; மத்திய அரசு அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 25, 2024
    04:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தொழில் முனைவோருக்கு ஆதரவாக, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை, நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையின்படி, நிதி வசதி அற்றவர்களுக்கு நிதி வழங்குதல் என்ற திட்டத்தின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

    முன்னதாக, 2024-25 ஒன்றிய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த உயர்வை அறிவித்த நிலையில், தற்போது அமலுக்கு வந்துள்ளது.

    இதன் கீழ், தருண் பிரிவில் கடன் பெற்றவர்கள், உரிய முறையில் கடனை திருப்பிச் செலுத்திய பின்னர், ரூ. 20 லட்சம் வரை கடன் பெற இந்த திட்டத்தால் உதவியாக இருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    தருண் பிளஸ்

    புதிதாக தருண் பிளஸ் பிரிவு தொடக்கம்

    கடன் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதற்காக தருண் பிளஸ் என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் பெறவும், முந்தைய தருண் கடன்களை சரியாக திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோர்களும் இந்த பிரிவிற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

    இந்த கடன்கள் அனைத்தும் மைக்ரோ யூனிட்களுக்கான (CGFMU) கடன் உத்தரவாத நிதியின் கீழ் காப்பீடு செய்யப்படும்.

    முன்னதாக, 2015இல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய PMMY, நிறுவனம் சாராத சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை அடமானமின்றி கடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

    சிசு, கிஷோர் மற்றும் தருண் என மூன்று பிரிவுகளில் இந்த கடன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நிர்மலா சீதாராமன்
    நிர்மலா சீதாராமன்
    மத்திய அரசு

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    இந்தியா

    நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி; இன்றும் (அக்.19) தங்கம், வெள்ளி விலைகள் கடும் உயர்வு தங்கம் வெள்ளி விலை
    அதிகரிக்கும் விபத்துகள்; ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த இந்திய ரயில்வே முடிவு இந்திய ரயில்வே
    ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; தீர்மானத்திற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் ஜம்மு காஷ்மீர்
    குடிநீர் பாட்டில்கள், சைக்கிள்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க திட்டம்; அமைச்சர்கள் குழு முன்மொழிவு ஜிஎஸ்டி

    நிர்மலா சீதாராமன்

    ரிசர்வ் வங்கியின் தடைக்கு மத்தியில் பேடிஎம் சிஇஓ-வுக்கு அரசாங்கம் வழங்கிய ஆலோசனை  ரிசர்வ் வங்கி
    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு
    இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்து பயணிகளுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன் மும்பை

    நிர்மலா சீதாராமன்

    மோடியின் புதிய அமைச்சரவையில் 7 பெண்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பு  இந்தியா
    பட்ஜெட் 2024இல் என்னென்ன மாற்றங்கள் அறிமுகமாக வாய்ப்புள்ளது  இந்தியா
    பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் உட்பட இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு இனி வரி கிடையாது: ஜிஎஸ்டி கவுன்சில் இந்தியா
    வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை பட்ஜெட்

    மத்திய அரசு

    இஸ்ரோவின் சந்திரயான்-4, வீனஸ் மிஷன், இந்திய விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இஸ்ரோ
    அனிமேஷன் துறைக்காக தனி உயர்கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் உயர்கல்வித்துறை
    இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வங்கிகளின் முக்கியத்துவம்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு நிர்மலா சீதாராமன்
    உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025