NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு
    செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    செயல்படாத ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு; மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 11, 2024
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    நிறுவப்பட்ட விதிகளின்படி செயல்படாத அல்லது ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய செயலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதன்கிழமையன்று (அக்டோபர் 9) மத்திய அமைச்சர்கள் மற்றும் செயலர்களுடனான உரையாடலின் போது, ​​பிரதமர் மோடி சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின் அடிப்படை விதி 56 (ஜே) ஐ மேற்கோள் காட்டி, இதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இதன்படி, ஒருவர் அரசு பணியில் இருக்க தகுதியற்றவராக இருந்தால், அவரை பணியிலிருந்து விடுவிக்க மேலதிகாரிகளால் முடியும்.

    இவ்வாறு கட்டாயமாக ஓய்வு பெறும் சந்தர்ப்பங்களில், மூன்று மாத அறிவிப்பு அல்லது அந்த காலத்திற்கு சமமான ஊதியம் மற்றும் படிகள் போன்ற இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

    வயதானவர்கள்

    55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிக்கல்

    55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அரசு ஊழியர்கள் இந்த விதியால் பாதிக்கப்படலாம் என்று என்று தெரிகிறது.

    விதி 48, ஒரு அரசு ஊழியர் 30 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையை நிறைவு செய்திருந்தால், பொது நலன் கருதி அவரை ஓய்வு பெறச் சொல்ல நியமன அதிகாரியை அனுமதிக்கிறது.

    பாதிக்கப்பட்ட அதிகாரிகள் இந்த முடிவுக்கு பதிலளிக்கலாம் மற்றும் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

    இந்த விதியின் கீழ் இதுவரை 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற்றுள்ளனர்.

    அரசாங்க ஊழியர்கள் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி அப்போது தெளிவான செய்தியை வழங்கியதாக கூறப்படுகிறது.

    குறைகள்

    பொதுமக்களின் குறைகளை களைவதில் முன்னுரிமை

    பதவி உயர்வில் தற்போதுள்ள ஸ்கிரீனிங் செயல்முறையை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    இந்த சந்திப்பின் போது, ​​அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களிடம் பிரதமர் மோடி, நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு வெகுமதி கிடைக்கும் என்று கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், பொதுமக்களின் குறைகளை வெறுமனே மேசைகளுக்கு இடையில் மாற்றாமல், விரிவாகவும் உடனடியாகவும் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறும் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பிரதமர் வலியுறுத்தினார்.

    இந்த முறைகேடுகளைக் கையாள்வதற்கு ஒவ்வொரு வாரமும் ஒரு நாளை ஒதுக்குமாறு செயலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். செயல்முறையை மேற்பார்வையிடும் பொறுப்பு இணை அமைச்சர்களுக்கு உள்ளது என மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி
    மத்திய அரசு

    சமீபத்திய

    'கொலைகாரரோ பயங்கரவாதியோ அல்ல': முன்னாள் IAS பூஜா கெத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து

    நரேந்திர மோடி

    இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு பயணப்படவுள்ள விண்வெளி வீரர்கள் யார்? அவர்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ககன்யான்
    பிரதமர் குறித்து தமிழக அமைச்சர் கீழ்த்தரமாக பேசியதாக பாஜக குற்றச்சாட்டு  பாஜக
    'செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்த முடியும்': பில் கேட்ஸிடம் பேசிய பிரதமர் மோடி  இந்தியா
    கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெளியாகியுள்ளது: பிரதமர் கருத்து கச்சத்தீவு

    பிரதமர் மோடி

    ஒருநாளைக்கு 60 லட்சம் சிப்கள்; குஜராத்தில் அமையும் மெகா செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பிரதமர் மோடி புருனே சென்றுள்ளார்; தீவு நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய தலைவர்  நரேந்திர மோடி
    சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ் இந்தியா
    சிங்கப்பூர், புருனே 3 நாள் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி  சிங்கப்பூர்

    மத்திய அரசு

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 'சைபர் கமாண்டோக்கள்': மத்திய அரசு திட்டம் சைபர் கிரைம்
    விவசாயிகளுக்கு ஆதார் மாதிரி அடையாள அட்டைகள்: மார்ச் மாதத்திற்குள் 5 கோடி இலக்கு விவசாயிகள்
    இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு  சுகாதாரக் காப்பீடு
    ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதம மந்திரி எலக்ட்ரிக் டிரைவ் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் எலக்ட்ரிக் வாகனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025