மத்திய அரசு: செய்தி
E20 உங்கள் பழைய வாகனத்தின் மைலேஜை 3-5% வரை குறைக்கக்கூடும்
புதிய 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20), சில பழைய வாகனங்களின் எரிபொருள் செயல்திறனில் சிறிதளவு குறைவை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்: இடத்தை மாற்ற தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என மாநிலங்களவையில் தகவல்
சென்னைக்கான இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பரந்தூர் பகுதியை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையில் செல்போன் வெளிச்சத்தில் போராடும் CJP
டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது.
நீட் 2026 விவகாரம்: ஜே.பி. நட்டாவுடன் CJP நடத்திய பேச்சுவார்த்தையின் 3 முக்கிய கோரிக்கைகள்
நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் Cockroach Janta Party பிரதிநிதிகள், இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து தங்களது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
"மெடிக்கல் ஷாப்பில் ஏமாறாதீங்க..." மருந்துகளின் அசல் விலையை மொபைலிலேயே அறியலாம்! மத்திய அரசின் பார்மா சஹி தாம் ஆப் பயன்படுத்துவது எப்படி?
ஆன்லைனிலோ அல்லது நேரடியாக மருந்தகங்களிலோ மருந்துகளை வாங்கும் போது நாம் சரியான விலையைத்தான் கொடுக்கிறோமா என்பது பலருக்கும் தெரிவதில்லை.
ஹோட்டல் பில்லில் சர்வீஸ் சார்ஜ் போட்டால் கட்டாயம் கட்ட வேண்டுமா? நுகர்வோர் அறிய வேண்டியவை
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி, அவர்களது உணவு பில்லில் சர்வீஸ் சார்ஜ் (சேவைக்கட்டணம்) என்ற பெயரில் கூடுதல் தொகையை தானாகவே சேர்ப்பதற்கு எதிராக மத்திய அரசு தற்போது கடுமையான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
பாஜகவிற்கு ஆதரவாக மாறுகிறதா திமுக? எதிர்க்கட்சிகளை அதிர வைத்த தொகுதி மறுவரையறை மசோதா 2026
இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், இடங்களின் எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் சட்டப்பூர்வ செயல்முறை தான் தொகுதி மறுவரையறை எனப்படும்.
ஈரானில் வாழும் இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: போர் உச்சக்கட்டத்தை எட்டியதால் இந்திய தூதரகம் அவசர அறிக்கை
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையேயான இராணுவ மோதல்கள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள் தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு அவசர ஆலோசனையை வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராகும் சிஜேபி! டெல்லியில் 163 தடை உத்தரவு அதிரடி அமல்
நாடாளுமன்றத்தின் பருவக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ள சலோ சன்சத் (நாடாளுமன்றம் நோக்கி செல்வோம்) முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டும், புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163ன் கீழ் (முன்பு சிஆர்பிசி 144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
8வது ஊதியக் குழுவின் ஆய்வு வரம்புகள் வெளியீடு! சம்பளம், ஓய்வூதிய உயர்வு எப்போது?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு வரைபடம் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கார் நிறுவனங்களுக்கு மைலேஜ் செக் வைக்கும் மத்திய அரசு! அறிமுகமாகிறது புதிய CAFE 3 விதிகள்
இந்தியாவில் கார்களின் எரிபொருள் செயல்திறனை (மைலேஜ்) கணிசமாக உயர்த்தவும், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய கேஃபே 3 (CAFE-III) வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
ரூ.2000க்கு மேல் யுபிஐ பேமெண்ட் செய்தால் 0.5% கட்டணமா? உண்மை நிலவரம் இதுதான்
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ அமைப்பில் மிக முக்கியமான கொள்கை மாற்றம் ஒன்று வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை டெல்லி போலீசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை சரிசெய்வது எப்படி?
பிறப்புச் சான்றிதழில் இருக்கும் தவறுகளை சரிசெய்வது சில சமயங்களில் கடினமாகத் தோன்றலாம். ஆனால், அதற்கான சரியான வழிமுறைகளைத் தெரிந்துகொண்டால், இந்த வேலையை எளிதாக்கிக்கொள்ளலாம்.
கிக் ஒர்க்கர்ஸ், ஃப்ரீலான்ஸர்களுக்குப் புதிய இபிஎஃப்ஓ திட்டம்! முழு விபரம் உள்ளே
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) பலன்களை, இனி ஃப்ரீலான்ஸர்கள், ஆலோசகர்கள், கிக் ஒர்க்கர்ஸ் (Gig Workers) மற்றும் சுயதொழில் செய்யும் தற்காலிகத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
₹2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு பெரிய வணிக நிறுவனங்களிடம் அரசு கட்டணம் வசூலிக்க திட்டம்
பெரிய வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளில் வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ISRO-விலிருந்து கொத்தாக வெளியேறும் சீனியர் விஞ்ஞானிகள்; சந்திரயான்-3, ககன்யான் முக்கிய புள்ளிகள் ராஜினாமா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் இருந்து சமீபகாலமாக அனுபவம் வாய்ந்த மூத்த விஞ்ஞானிகள் அதிகளவில் (120 விஞ்ஞானிகள்) தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: "ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது" என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 19 நாட்களாக தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்பெயர் அம்சத்திற்கான புதிய விதிகளை பரிசீலிக்கும் மத்திய அரசு
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் அறிமுகப்படுத்திய பயனர்பெயர் அம்சத்தின் சட்டரீதியான தாக்கங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
வளைகுடா பதற்றம்: இந்திய மாலுமிகளை பாதுகாக்க 'Seafarer-First' திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'Seafarer-First' என்ற விரிவான திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
E20 அறிமுகத்திற்கு பிறகு 60% கார் உரிமையாளர்கள் மைலேஜ் குறைந்ததாக தெரிவிக்கின்றனர்: கணக்கெடுப்பு
லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், 2023-24 காலகட்டத்தில் தங்கள் கார்களை வாங்கிய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் கிட்டத்தட்ட 60% பேர், மைலேஜில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருகிறது பாலியல் கல்வி: மத்திய அரசின் புதிய முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்குமா?
மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விரிவான பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டம்; எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் முக்கிய விவகாரங்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது ஜூலை 19 அன்று காலை 11 மணிக்கு மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய ராணுவத்தில் மெகா மாற்றம்: தனியார் நிறுவனங்களும் இனி ஏவுகணைகளைத் தயாரிக்கலாம்; மத்திய அரசு திட்டம்
இந்திய பாதுகாப்புத் துறையில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் வசம் மட்டுமே இருந்து வந்த ஏவுகணை தயாரிப்புத் துறையை, இனி தனியார் நிறுவனங்களுக்கும் திறந்துவிட மத்திய அரசு ஒரு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.
சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான 39 புதிய மருந்து தயாரிப்புகளின் சில்லறை விலைக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
அரசு விழாக்களில் மாநில பாடல் முதலில், பிறகு தேசிய கீதம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
மத்திய உள்துறை அமைச்சகம் அரசு விழாக்களில் மாநில பாடல்கள், தேசிய பாடல் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை இசைப்பது குறித்து புதிய மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வெறும் சம்பள உயர்வு மட்டுமல்ல! இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி மற்றும் நுகர்வை மாற்றும் 8வது ஊதியக் குழு
பொதுவாக மத்திய ஊதியக் குழு என்றாலே, அது அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான ஒரு நடைமுறை என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகள், வாய்வழி மருந்துகளுக்கான விதிகளை இந்தியா மாற்றியுள்ளது
மத்திய அரசாங்கம், 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளைத் திருத்தியுள்ளது.
உயர் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்த முன்மொழிவை 8வது ஊதியக் குழு பரிசீலித்து வருகிறது
8வது மத்திய ஊதியக் குழு (CPC), உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளுக்கான சம்பள உச்சவரம்பு குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினை உட்பட பல்வேறு முன்மொழிவுகள் குறித்து தற்போது விவாதித்து வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: இங்கிலாந்து கார்களை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு வெளியிட்டது
பிரிட்டனிலிருந்து பயணிகள் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, அரசாங்க ஒப்புதலை பெறுவதற்கும், ஒதுக்கீட்டின் அடிப்படையிலான சலுகை இறக்குமதி வரிகளைப் பெறுவதற்கும் ஆன நடைமுறையை இந்தியா வெளியிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை 2026: 5 நாட்களில் உருகிய பனி லிங்கம்; இமயமலையின் காலநிலை மாற்றத்தால் பக்தர்கள் கவலை
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிக் கல்வியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்; தொடக்கக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியம் என சாதனை
மத்திய அரசின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE+) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பள்ளிக் கல்வியின் அனைத்து முக்கியக் குறியீடுகளிலும் தமிழ்நாடு தேசிய சராசரியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
வேற்று மாநிலத்தில் 3 ஆண்டுகள் வரை வண்டியை ஓட்டலாம்! Re-registration விதிகளில் மாற்றம் கொண்டு வரும் மத்திய அரசு
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (MoRTH), மோட்டார் வாகன சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை பரிந்துரைத்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைமையகமான 24, அக்பர் ரோடு பங்களா, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக "அனுமதியின்றி ஆக்கிரமிப்பு" செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எந்தவொரு வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தெரியவந்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இனி மொபைலில் 'e-OCI' போதும்! இந்திய அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வசதி
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (OCI Cardholders) பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில், இந்திய அரசு 'e-OCI' என்ற புதிய டிஜிட்டல் ஓசிஐ கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் EPF வட்டி ஜூலை 15-க்குள் வரவு வைக்கப்படும்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வரவு வைக்கும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அறிவித்தார்.
மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி: இன்ஸ்டாகிராமில் உள்ள குழந்தை வன்கொடுமை விளம்பரங்களை உடனடியாக நீக்க உத்தரவு
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலியில், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் சுரண்டல் தொடர்பான கட்டண விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்; மத்திய அரசு உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வரத்து மீண்டும் வழக்கம் போல் சீராகத் தொடங்கியுள்ளதால், எரிவாயு விநியோகஸ்தர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20இல் தொடக்கம்: கிரண் ரிஜிஜு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (ஜூலை 4) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.