இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை, புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் காற்றின் தரம் மோசமடைவதற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1981 முதல் அரியர் வைத்த மாணவர்கள் பட்டம் பெற அரிய வாய்ப்பு; சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம், அரியர் வைத்த மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.10,000; தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக, மாநில அரசு அதிரடியாக மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தமான் நிக்கோபாரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆகப் பதிவு
அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது.
இமெயிலை ஹேக் செய்து பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.
தென் தமிழக ரயில் பயணிகளே அலெர்ட்; நவம்பர் 29 வரை தாம்பரத்திலிருந்துதான் ரயில்கள் கிளம்பும் என அறிவிப்பு
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உயிர் காக்கும் உடலுறுப்பை 21 நிமிடங்களில் இலக்கைச் சேர உதவிய சென்னை மெட்ரோ ரயில்
உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒரு அரிய மருத்துவ அவசரப் பணியில் விரைந்து செயல்பட்டுப் பெரும் பங்காற்றியுள்ளது.
பூட்டானுக்குப் பிரதமர் மோடி நவம்பர் 11 முதல் இரண்டு நாள் அரச முறைப் பயணம்
இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பூட்டானுக்கு அரச முறைப் பயணம் மேற்கொள்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட் கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசு அபாயம்: பல பகுதிகளில் காற்றின் AQI தரக் குறியீடு 400ஐ கடந்தது
தேசிய தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
ஆபரேஷன் திரிசூலம் முப்படைப் பயிற்சியில் இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை பங்கேற்பு
இந்திய ராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளை தற்போது ஆபரேஷன் திரிசூலம் என்ற கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழ் முப்படைப் பயிற்சிகளின் வரிசையில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.
தலைக்கவசம் அணியாதவருக்கு ₹21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை; பின்னணி என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு ₹21 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார்.
டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (நவம்பர் 8) அறிவித்தார்.
இனி காலை 8 முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்; மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேஜஸ் விமானங்களுக்காக HAL-க்கு GE ஏரோஸ்பேஸ் 113 என்ஜின்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம், தனது தேஜஸ் இலகுரக போர் விமானத் திட்டத்திற்காக (LCA), ஜெனரல் எலக்ட்ரிக் (GE) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 113 F404-GE-IN20 ஜெட் என்ஜின்களைக் கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இறுதி செய்தது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவல் முயற்சி; 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவ முயற்சி நடப்பதாக இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) அன்று துல்லியமான உளவுத் தகவல் கிடைத்தது.
டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்; ஒருவர் பலி
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் சட்டவிரோத அணு ஆயுத நடவடிக்கைகள் அதன் வரலாற்றின் பிரதிபலிப்பு: மத்திய அரசு
பாகிஸ்தான் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்வினையாற்றியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?
சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை) அதிக மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்தித்த நாடுகள் குறித்த புதிய தரவுகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ளன.
39 வருடம் பணிபுரிந்த அரசு ஆசிரியருக்கு கிராம மக்கள் தேர்ப்பவனியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரியாவிடை
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தோபிவாடா கிராமத்தில், கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பள்ளிக்குச் சேவை செய்த ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, அலங்கரிக்கப்பட்ட தேர்ப் பவனி மூலம் கிராம மக்கள் பிரியாவிடை அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
சாலைகள், நெடுஞ்சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் கூறிய வழிமுறைகள் என்ன?
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் திரியும் கால்நடைகள் உட்பட அனைத்து தெரு விலங்குகளையும் உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு; 300+ விமானங்கள் தாமதம்
தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து: விமானி மீது பழி சுமத்த முடியாது என உச்ச நீதிமன்றம் நெகிழ்ச்சி
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து குறித்து நீதி விசாரணை கோரி, விபத்தில் உயிரிழந்த விமானியின் தந்தை தாக்கல் செய்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (DGCA) உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நோட்டீஸ் அனுப்பியது.
பொது இடங்களிலிருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்ற வேண்டும்; உச்ச நீதிமன்றம் உத்தரவு
நாட்டின் கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற பொது இடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து தெரு நாய்களை முழுமையாக அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.
'வந்தே மாதரம்' 150ஆம் ஆண்டு விழா: சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர்
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு அஞ்சல் தலையையும், நினைவு நாணயத்தையும் வெளியிட்டுள்ளார்.
கைதுக்கான காரணங்களை 'எழுத்துப்பூர்வமாக' வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியாவில் எந்தவொரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபராக இருந்தாலும், அவரது கைதுக்கான காரணங்களை கட்டாயம் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் ATC அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விமானங்கள் தாமதம்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(IGIA) விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை காலை விமான நடவடிக்கைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'Vande Mataram' நூற்றாண்டு விழாவை நவம்பர் 7ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 7, 2025 அன்று ஓராண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைப்பார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்; கூடுதல் அவகாசம் கிடையாது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு 2025 இல், முதற்கட்டமாகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 7 ஆம் தேதி எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
'80% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட'INS Ikshak' கப்பலின் சிறப்பு என்ன?
இந்திய கடற்படை அதன் மூன்றாவது சர்வே வெசல் (SVL) வகை கப்பலான INS இக்ஷக்கை நவம்பர் 6, 2025 அன்று கொச்சியில் பணியமர்த்தியது.
அஜித்குமார் வழக்கில் கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலின் காவலாளி அஜித்குமார், நகை திருட்டுப் புகார் தொடர்பாகத் தனிப்படை போலீஸாரின் தாக்குதலில் உயிரிழந்த வழக்கில், இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரி சிபிஐ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியது.
பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
50 ஆண்டுகளாக திருமண சாபத்தால் அவதிப்பட்ட கிராமத்திற்கு கிடைத்த சாப விமோசனம்; சுவாரஸ்ய பின்னணி
பாட்னாவில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள கைமூர் மாவட்டத்தில், பர்வன் கலா என்ற கிராமம் அரை நூற்றாண்டு காலமாக ஒரு துயரமான பட்டத்தை சுமந்தது.
சென்னை ராயப்பேட்டையில் மூடப்பட்ட பாலத்தில் பைக் ரேஸ் செய்து இருவர் உயிரிழப்பு
சென்னை ராயப்பேட்டையில் புதன்கிழமை மூடப்பட்ட போக்குவரத்து பாலத்தில் வேகமாக வந்த இரண்டு மோட்டார் பைக்குகள் மோதியதில் இரண்டு ஆண்கள் இறந்தனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரம்
தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) மீண்டும் கடுமையாகச் சரிந்து, 'மோசம்' மற்றும் 'மிகவும் மோசம்' என்ற பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்: 8வது ஊதியக் குழுவில் ஊதிய உயர்வு மட்டுமல்ல; இவையும் மறுபரிசீலனை செய்யப்படும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பாக, 8வது ஊதியக் குழுவை (8th Central Pay Commission) அமைத்து மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.