LOADING...
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்

தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2025
08:24 am

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 10 மற்றும் 11) தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் உள்ளிட்ட ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையின் வானிலை

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில், வரும், 12ல் கனமழை பெய்யலாம். புதுச்சேரியிலும் இரண்டு நாட்களுக்கு மித மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.