LOADING...
'வந்தே மாதரம்' 150ஆம் ஆண்டு விழா: சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர் 
'வந்தே மாதரம்' சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர்

'வந்தே மாதரம்' 150ஆம் ஆண்டு விழா: சிறப்பு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர் 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 07, 2025
11:17 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு அஞ்சல் தலையையும், நினைவு நாணயத்தையும் வெளியிட்டுள்ளார். இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், நாடு முழுவதும் ஒரு வருடம் கொண்டாடப்பட உள்ள 'வந்தே மாதரம்' 150வது ஆண்டு நிறைவு விழா தொடக்க நிகழ்வுகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் நவம்பர் 7, 2025 முதல் நவம்பர் 7, 2026 வரை 'வந்தே மாதரம்' 150வது ஆண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

சிறப்பம்சங்கள்

விழாவின் சிறப்பம்சங்கள்

150 ஆண்டுகள் என்ற இந்த மகத்தான மைல்கல்லை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி சிறப்பு ₹150 மதிப்புள்ள நினைவு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டார். இந்த விழாவுடன் இணைந்து, நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் 'வந்தே மாதரம்' பாடலின் முழுப் பகுதியையும் ஒரே நேரத்தில் கூட்டாகப் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேச பக்தி, ஒற்றுமை மற்றும் தேசிய பெருமையின் அடையாளமாக கருதப்படும் இந்த பாடலை, பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1875ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி எழுதினார். தாய்நாட்டை வலிமை, செழிப்பு மற்றும் தெய்வீகத்தின் வடிவமாக போற்றிய இந்தப் பாடல், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்து, தேசிய உணர்வை ஆழமாக வேரூன்றச் செய்ததில் முக்கியப்பங்கு வகித்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post