LOADING...

01 Nov 2025


மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? ஐசிசி விதிகள் இவைதான்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

கிரியேட்டர்களுக்கு குட் நியூஸ்; இனி யூடியூபில் SD வீடியோக்களையும் HD தரத்தில் வெளியிடலாம்

யூடியூப் நிறுவனம், அதன் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் பெரிதும் பயனளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் வீடியோக்களைத் தானாகவே மேம்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்டை விட ஐபோனில் மோசடி மற்றும் ஸ்பேம் செய்திகள் 58% அதிகமாம்; கூகுள் ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

விலை உயர்ந்த ஐபோன்கள் பாதுகாப்பானவை என்ற பொதுவான நம்பிக்கை தவறானது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9: நான்காவது வாரத்தில் கலையரசன் எலிமினேட்? வைல்ட் கார்டு என்ட்ரியால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

விஜய் டிவியில் பரபரப்புடன் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.

தூங்கும்போது அதிக குறட்டை விடுபவரா நீங்கள்? இனி அசட்டையா இருக்காதீங்க; நிபுணர்கள் எச்சரிக்கை

குறட்டை என்பது சாதாரணமாகத் தோன்றினாலும், பெரும்பாலும் அது நம் உடல் உதவிக்காகக் கேட்கும் ஒரு அமைதியான அபாய ஒலியாகும்.

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர கோவில் கூட்ட நெரிசலில் 10 பேர் பலி: தகவல் தெரிவிக்காததே காரணம்; முதல்வர் பேட்டி

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: டிஜிட்டல் முறையில் நவம்பர் 1 முதல் சுய பதிவு செய்யலாம்

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027க்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

20 ஆண்டு கால பயணத்திற்கு முடிவு; இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா ஓய்வு

இந்திய டென்னிஸ் உலகின் தூணாக விளங்கிய மூத்த வீரர் ரோஹன் போபண்ணா, தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான அற்புதமான தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகச் சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று அறிவித்துள்ளார்.

இனி ஆதார் அப்டேட்டிற்கு அலைய தேவையில்லை; விரைவில் e-Aadhaar செயலி அறிமுகம் செய்யப்படும் என UIDAI அறிவிப்பு

இந்தியக் குடிமக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), e-Aadhaar என்ற புதிய மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

தாயுமானவர் திட்டம்: நவம்பர் 3 முதல் சென்னை முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், சென்னை மாநகரத்தில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

எஸ்.எஸ். ராஜமௌலியின் பிரம்மாண்டம்: 'பாகுபலி: தி எபிக்' திரைப்படம் முதல் நாளில் ₹10 கோடி வசூல் சாதனை

திரைக்கதை அமைப்பில் தனக்கு நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி இரண்டு பாகங்களின் சுருக்கப்பட்ட, மறுசீரமைக்கப்பட்ட பதிப்பான பாகுபலி: தி எபிக் (Baahubali: The Epic) திரைப்படம் வெளியாகி அதீத வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆந்திரப் பிரதேச கோவிலில் சோகம்: ஏகாதசி கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல பக்தர்கள் பலி

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் இருக்கும் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில், ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கிப் பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர செங்கோட்டையன் முடிவு; ஈபிஎஸ் மீது கடும் விமர்சனம் 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீக்கம் வேதனையளிப்பதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 1) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிறு கார்கள் விற்பனையில் புதிய எழுச்சி; ஜிஎஸ்டி குறைப்பால் மாருதி சுஸூகிக்கு 3.5 லட்சம் முன்பதிவுகள்

மத்திய அரசு அண்மையில் சிறு கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28% இலிருந்து 18% ஆகக் குறைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகி இந்தியா லிமிடெட் ஒட்டுமொத்தமாக 3,50,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 'கடுமையான வறுமையற்ற மாநிலம்' என கேரளாவை அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்

மாநில உருவாக்க தினமான சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கடுமையான வறுமையற்ற மாநிலம் (Extreme Poverty-Free) என்று அறிவித்து, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

நவம்பர் முதல் நாளில் தங்கம் விலை ஏறியதா இறங்கியதா? இன்றைய விலை நிலவரம் 

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 1) சிறிய அளவில் உயர்வைச் சந்தித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களே அலெர்ட்; ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2026க்கான விண்ணப்பம் தொடக்கம்

இந்தியாவின் முதன்மையானப் பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026 ஜனவரிப் பதிவிற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

500 மில்லியன் டாலர் கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் பாங்கிம் பிரம்மபட் மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

சீனா எல்லைப் பகுதியில் தயார்நிலை: வடகிழக்கு மாநிலங்களில் இந்திய விமானப்படைப் பயிற்சி - NOTAM அறிவிப்பு வெளியீடு 

இந்திய விமானப்படை (IAF), சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ஒரு பெரிய அளவிலானப் பயிற்சிக்காக NOTAM (Notice to Airmen) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

31 Oct 2025


சமையலறையில் தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்: இதய ஆரோக்கியத்திற்கான நிபுணரின் எச்சரிக்கை

உங்கள் சமையலறையில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது, ஊட்டச்சத்து நிறைந்த தேர்வுகளைச் செய்ய உதவுகிறது. ஆரோக்கியமான உணவுகள் எளிதில் கிடைக்கும்போது, அவற்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

செயற்கைக்கோள் இன்டர்நெட் புரட்சி: சோதனை ஓட்டத்தை அடுத்து ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் அறிமுகபடுத்த தீவிரம்

டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், தனது செயற்கைக்கோள் இன்டர்நெட் சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்க முடிவெடுத்துள்ளார்.

திருவிழாக் கால விற்பனை உச்சம்: ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் குறைந்த பணவீக்கத்தால் தேவை அதிகரிப்பு

இந்தியாவில் திருவிழாக் காலத்தில் நுகர்வு மற்றும் செலவு எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.

நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார், வங்கி நியமனம் மற்றும் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்

நவம்பர் 2025 முதல், ஆதார் புதுப்பித்தல் கட்டணங்கள், வங்கி நியமன விதிகள் மற்றும் ஜிஎஸ்டி வரிக் கட்டணங்கள் உட்படப் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

சென்னையில் ரூ.3,250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி ஆலையை துவக்குகிறது  ஃபோர்டு நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகுத் தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிச்சாமி அதிரடி

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்? தேர்தலுக்கு முன்பாக இலவச லேப்டாப்களை வழங்க தமிழக அரசு திட்டம் என தகவல்

தமிழகத்தில் உள்ள சுமார் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் மாநில அரசின் முக்கியத் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீண்டகால காதலி அகிலாவை கரம்பிடித்தார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

ஒரு அம்பு இரண்டு இலக்குகள்; சீனா மற்றும் பாகிஸ்தானை ஒரே நேரத்தில் சமாளிக்க தயார் நிலையில் இந்திய கடற்படை

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழையும் சீனக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களையும் இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகக் கடற்படை துணை அட்மிரல் சஞ்சய் வத்சாயன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தார்.

ஃபாஸ்டேக் பயனர்களுக்கு மிகப் பெரிய நிம்மதி: KYV சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக்கியது NHAI

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) 'உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்' (KYV - Know Your Vehicle) சரிபார்ப்புச் செயல்முறையை எளிமையாக்கியதன் மூலம் ஃபாஸ்டேக் பயனர்களுக்குப் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது.

என்னது! சாப்பிடும் காளான்களை பயன்படுத்தி லேப்டாப் சார்ஜ் செய்யலாமா? விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு

சமையலறையில் பொதுவாகக் காணப்படும் சிட்டாகி காளான்கள் (Shiitake Mushroom), அடுத்த தலைமுறைக் கணினிகளுக்கு ஆற்றல் அளிக்கும் ஒரு புதுமையான மாற்றுப் பொருளாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சகாப்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 1) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 1) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ₹9,000 நிதி; ஆளும் கட்சியின் தேர்தல் வாக்குறுதி

பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான (243 இடங்கள்) தனது சங்கல்ப பத்திரத்தை (தேர்தல் அறிக்கை) தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) பாட்னாவில் வெளியிட்டது.

நகை பிரியர்களுக்கு நிம்மதி; இன்றைய (அக்டோபர் 31) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலையால் நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையே நீடிக்கிறது.

போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை

எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தது.

பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் உத்தரவு: இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்துப் பட்டங்கள், மரியாதைகள் நீக்கம்

பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பட்டங்கள் மற்றும் மரியாதைகள் நீக்கப்பட்டுள்ளது.

ஜியோ பயனர்களுக்கு ஜாக்பாட்; ₹35,000 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ ஏஐ 18 மாதங்களுக்கு இலவசம்; எப்படி பயன்படுத்துவது?

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் மூலம், கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி

நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.