 
                                                                                பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய சகாப்தம்: இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், இருதரப்பிற்கும் இடையிலான 10 ஆண்டுக்கானப் பாதுகாப்பு உடன்படிக்கை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று கையெழுத்தானது. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்கப் போர் துறையின் செயலர் பீட்டர் ஹெக்செத் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆசியான் உச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தோ-பசிபிக்
இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு
இந்த உடன்பாடு, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான ஏற்கனவே வலுவான பாதுகாப்புப் பார்ட்னர்ஷிப்பில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தப் பாதுகாப்புச் சட்டகம், இந்தியா-அமெரிக்கா உறவின் ஒட்டுமொத்தப் பரிமாணத்திற்கும் கொள்கை வழிகாட்டுதலை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "நமது வளர்ந்து வரும் மூலோபாய ஒருமித்த கருத்தின் சமிக்ஞை இது. சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதற்கு இந்தக் கூட்டாண்மை மிக முக்கியமானது." என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரியால் இருதரப்பு உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில் இந்தப் பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Embed
Had a fruitful meeting with my US counterpart @SecWar Peter Hegseth in Kuala Lumpur. We signed the 10 years ‘Framework for the US-India Major Defence Partnership’. This will usher in a new era in our already strong defence partnership.
— Rajnath Singh (@rajnathsingh) October 31, 2025
This Defence Framework will provide policy… pic.twitter.com/IEP6Udg9Iw