இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
பிரிக்ஸ் மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரியம்; உலகத் தலைவர்களை ராமேஸ்வரம் கோவில் பின்புலத்துடன் வரவேற்ற பிரதமர் மோடி
புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்று வரும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், தமிழ்நாட்டின் ஆன்மீகப் பெருமையை சர்வதேச அளவில் பறைசாற்றும் வகையில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கடும் கண்டனம்! புதுடெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட உறுப்பு நாடுகள்; முழு விபரம்
புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவில், இந்தியாவின் ராஜதந்திரத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் புதுடெல்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல! ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு பிரதமர் மோடி 10 அம்ச வழிகாட்டல்
புதுடெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
புடின் ஒருபுறம், ஈரானின் பெசெஷ்கியான் மறுபுறம்! சிவப்புக் கம்பளத்தில் கை கோர்த்து நடந்த பிரதமர் மோடி
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 2026 பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோருடன் சிவப்புக் கம்பளத்தில் கை கோர்த்து நடந்து வந்த புகைப்படம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றில் முதன்முறை! பிரிட்டிஷ் விமானிகளுக்கு 3 இந்திய விமானப்படை அதிகாரிகள் பயிற்சி
இந்திய மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்திய விமானப்படையின் 3 தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுநர்கள் (QFIs) பிரிட்டன் சென்றுள்ளனர்.
கடல்வழிப் பாதை பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே உலக வர்த்தகம் சாத்தியம்! பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த சர்வதேச நிருபர்களுக்கு சர்ப்ரைஸ்: பிஹார் மக்கானா, ஒடிசா காபியுடன் இந்திய கலாச்சார மீடியா கிட்
புதுடெல்லியில் செப்டம்பர் 12- 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ்(BRICS) உச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு, இந்தியாவின் பல்வகைமை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சிறப்பு மீடியா கிட் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை வங்கி சேவைகள் பாதிப்பு! நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 8 லட்சம் ஊழியர்கள்; கோரிக்கைகள் என்ன?
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இணைந்து செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அளித்த மாஸ் பரிசு; தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகரங்கில் உயர்த்திய நெகிழ்ச்சித் தருணம்
BRICS உச்சிமாநாட்டின் இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
இந்திய ராணுவத்திற்குப் பெருமை! நேட்டோ அறிக்கையில் 10 இடங்களில் மேற்கோள் காட்டப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஆய்வு
நவீன போர்க்களங்கள் வெறும் ஆயுத மோதல்களைத் தாண்டி எவ்வாறு தகவல்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு மாறியுள்ளன என்பது குறித்து இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள் எழுதிய ஆய்வுக் கட்டுரை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
புடின், ஜி ஜின்பிங்கிற்கு தமிழ்நாட்டு முறுக்கு, கபாப்: டெல்லி BRICS மாநாட்டில் அசத்தும் இந்திய மெனு
புதுடெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டை முன்னிட்டு தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு! பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
தமிழறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (89) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11) காலமானார்.
டெல்லி BRICS மாநாடு: பிரத்யேக விஐபி கார்களைத் தவிர்த்து ஒரே பேருந்தில் பயணிக்கும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்
டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.
பாகிஸ்தானை முந்திய இந்தியா! இந்தியாவின் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை 190 ஆக உயர்வு
இந்தியாவின் அணு ஆயுத சேமிப்பு கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் மொத்த அணு ஆயுதப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஃபெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்ஸ் (FAS) ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மோடி - ஜின்பிங் சந்திப்பு: இருதரப்பு பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயங்கள் என்ன?
புதுடெல்லியில் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் புதுடெல்லி வருகிறார்.
பல்கலைக்கழக வளாகத்திலும் ஆரவல்லி மலையிலும் வெடிகுண்டு சோதனை நடத்திய அல்-ஃபலா மருத்துவர்கள்: டெல்லி செங்கோட்டை NIA விசாரணையில் அம்பலம்
கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே 15 பேரின் உயிரை பறித்த தற்கொலைப்படை தாக்குதல் வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செப்டம்பரில் 21,000 மெகாவாட்டை தொட்ட மின் தேவை; மின் வாரியத்திற்கு நெருக்கடியால் தினமும் 1 மணி நேரம் மின் தடையா?
தமிழகத்தில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாததால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்திலும் தினசரி மின் தேவை 21,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
PF பணத்தை தர தாமதித்த EPFO அமைப்பு; ஓய்வுபெற்ற ஊழியருக்கு 6% வட்டி வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரின் ₹14.06 லட்சம் PF தொகையை வழங்குவதில் 35 நாட்கள் தேவையின்றி தாமதம் செய்ததற்காக, அப்பணத்திற்கான 6 சதவீத ஆண்டு கூட்டு வட்டியை இழப்பீடாக வழங்க வேண்டும் என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு (EPFO) மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவுக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை: MGM மருத்துவமனை அறிக்கை
கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) MLA வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை MGM மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை
புதுடெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை செப்டம்பர் 12 நடைபெற உள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு! இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) சட்டசபை இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான விஜய் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்த ₹1,200 கோடி மதிப்பிலான புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாக திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக தரையிறங்கிய ரஷ்ய விமானங்கள்: BRICS உச்சி மாநாட்டிற்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு, நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதன்முறையாக 3 ரஷ்ய ராணுவ விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
மிசா தாடை தழும்பு சர்ச்சை: சட்டமன்ற நிகழ்வு குறித்து முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி வீடியோ
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சு மற்றும் தாடையைத் தொட்டுக் காட்டிய பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்: முதல்வர் விஜய் இன்று வெளிநாடு பயணம்
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தனது முதலாவது அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறார்.
TVK தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! முக்கிய முடிவுகளுடன் பனையூர் கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்(தவெக) தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் TVK தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பெயரில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருப்பதாக பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானிக்கு SIR நோட்டீஸ்
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலின் SIR நடவடிக்கையின் போது, அவரது பெயரில் முரண்பாடு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைக்கு ஆஜராகுமாறு புகழ்பெற்ற விஞ்ஞானியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான பேராசிரியர் சி.என்.ஆர். ராவ்-க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அளித்த முக்கிய விளக்கம்
தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதின்-மோடி சந்திப்பு: நிகழ்ச்சி நிரலில் எஸ்யு-57, அணுசக்தி குறித்து இடம்பெறும் என தகவல்
டெல்லியில் BRICS தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார்.
2015 முதல் 2023 வரை தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் முறைகேடு; ரூ.10,000 கோடியில் விதிகள் மீறல்
மத்திய அரசின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களில் நடத்தப்பட்ட முதல் முதன்மையான கணக்காய்வு அறிக்கையில், தமிழ்நாட்டில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) சுட்டிக்காட்டியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக அதிரடி திட்டம், திமுக களம் இறங்குவதால் மும்முனை போட்டி உறுதி
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
BRICS உச்சி மாநாட்டால் டெல்லியில் உச்சத்தை தொட்ட ஹோட்டல் கட்டணங்கள்; ஒரு இரவு கட்டணம் இவ்வளவு லட்சமா?
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள BRICS உச்சி மாநாட்டை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் உள்ள முன்னணி சொகுசு ஹோட்டல்களின் அறைகளுக்கான தேவையும் கட்டணமும் உச்சத்தை எட்டியுள்ளன.
தமிழக தலைமைச் செயலகத்தில் புதிய இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு
தமிழக அரசு நிர்வாக வசதிக்காகவும், பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் 'இந்து சமய அறநிலையத் துறை' என்ற புதிய தனித் துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல்
சென்னையை அடுத்துள்ள போரூரில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடைசி வாய்ப்பாக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உலக தலைவர்கள் பங்கேற்கும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு 2026: முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்ப்புகள்
இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ்(BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மும்பையில் பிரதமர் நிகழ்ச்சி கூட்டத்தில் பாதுகாப்பு அத்துமீறல்: துப்பாக்கி மற்றும் போலி PMO ஐடியுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு
மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த GFF 2026 நிகழ்விடத்தில், துப்பாக்கியுடன் நுழைந்த நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிறந்த தூய்மையான காற்றுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு: லக்னோ முதலிடம்; சென்னை எந்த இடம்?
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான 'ஸ்வச் வாயு சர்வேக்ஷன்' காற்று தூய்மைத் தரவரிசை பட்டியலில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.