BRICS உச்சி மாநாட்டால் டெல்லியில் உச்சத்தை தொட்ட ஹோட்டல் கட்டணங்கள்; ஒரு இரவு கட்டணம் இவ்வளவு லட்சமா?
செய்தி முன்னோட்டம்
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள BRICS உச்சி மாநாட்டை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் உள்ள முன்னணி சொகுசு ஹோட்டல்களின் அறைகளுக்கான தேவையும் கட்டணமும் உச்சத்தை எட்டியுள்ளன. மாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் முன்னதாகவே வருகை தருவதாலும், தங்களது தங்கலை நீட்டிப்பதாலும் டெல்லியின் மத்தியப் பகுதியில் உள்ள முன்னணி ஹோட்டல்களில் அறைகள் வேகமாகப் பதிவாகிவிட்டன.
தட்டுப்பாடு
முக்கிய ஹோட்டல்களில் அறைகள் காலி இல்லை
தாஜ் மஹால் மற்றும் தி ஓபராய் ஹோட்டல்களில் செப்டம்பர் 11-12 தேதிகளுக்கு அறைகள் முழுவதும் பதிவாகிவிட்டன.
தாஜ் பேலஸ் மற்றும் தி லீலா பேலஸ் ஹோட்டல்கள் செப்டம்பர் 10-12 காலகட்டத்தில் புதிய முன்பதிவுகளை ஏற்கவில்லை.
ஐடிசி மௌரியா ஹோட்டலில் செப்டம்பர் 10-13 வரை ஒரு இரவுக்கான அறை கட்டணம் ₹2.3 லட்சத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய ஹோட்டல்கள் சங்கத்தின் (HAI) தலைவரும், ராடிசன் ஹோட்டல் குழுமத்தின் தெற்காசிய தலைவருமான கே.பி. கச்ரு கூறுகையில், இந்தியாவில் தற்சமயம் சுமார் 2,00,000 முதல் 2,20,000 பிராண்டட் ஹோட்டல் அறைகள் மட்டுமே இருப்பது பெரும் சவாலாக உள்ளது என்றார்.
கடந்த ஆண்டை விட செப்டம்பர் மாத அறை கட்டணங்கள் 25% வரை உயர்ந்துள்ளது.