Loading...
வரலாற்றில் முதன்முறை! பிரிட்டிஷ் விமானிகளுக்கு 3 இந்திய விமானப்படை அதிகாரிகள் பயிற்சி
பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க லண்டன் சென்ற 3 இந்திய விமானப்படை பயிற்றுநர்கள்

வரலாற்றில் முதன்முறை! பிரிட்டிஷ் விமானிகளுக்கு 3 இந்திய விமானப்படை அதிகாரிகள் பயிற்சி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
08:05 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்திய விமானப்படையின் 3 தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுநர்கள் (QFIs) பிரிட்டன் சென்றுள்ளனர். பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஆர்ஏஎஃப் வேலி (RAF Valley) தளத்தில் இணைந்துள்ள இவர்கள், பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஃபாஸ்ட்-ஜெட் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க உள்ளனர். இரு நாடுகளின் பாதுகாப்பு வரலாற்றில் இந்தியப் பயிற்றுநர்கள் பிரிட்டனில் பணியமர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஒத்துழைப்பு

இரு நாடுகளின் தொழில்முறை சிறப்பை வலுப்படுத்தும் முயற்சி

இந்திய விமானப்படை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த வரலாற்று சாதனையை முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நியமனமானது இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையேயான தொழில்முறை சிறப்பு, ஒருங்கிணைந்து செயல்படும் திறன் மற்றும் நீண்டகால இந்தியா-பிரிட்டன் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என இந்திய விமானப்படை பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

பின்னணி

இரு நாட்டு தலைவர்களின் மூலோபாய பேச்சுவார்த்தையின் பின்னணி

முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர் மட்ட பேச்சுவார்த்தையில், இரு நாடுகளின் ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பரிமாற்றங்களை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே பாதுகாப்புச் செயலர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பிரிட்டன் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வரலாற்று முடிவு செயல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எதிர்காலத் திட்டம்

இந்தியா-பிரிட்டன் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டம்

இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய கடற்படையும் பிரிட்டிஷ் ராயல் கடற்படையும் இணைந்து கொங்கன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனுடன் தற்போது விமானப்படை பயிற்றுநர்கள் பிரிட்டன் ராயல் விமானப்படை பயிற்சியில் நேரடியாகக் கலந்துகொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ பயிற்சி மற்றும் கல்வித் தொடர்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

ADVERTISEMENT