LOADING...

உலக செய்திகள்

அலாஸ்கா-கனடா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவு

அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் பிரதேச எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) அதிகாலையில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 4 பொதுமக்கள் பலி என தாலிபான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

கவிஞர் கல்லறையில் கிரேட்டர் ஆப்கானிஸ்தான் வரைபடத்தை நிறுவிய தாலிபான்; பாகிஸ்தான் அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தாலிபான்கள் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

04 Dec 2025
ரஷ்யா

யார் இந்த அபய் குமார் சிங்? இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்தக் குரல் கொடுக்கும் பீகாரில் பிறந்த ரஷ்ய எம்எல்ஏ

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் அபய் குமார் சிங், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்தியர்களால் அமெரிக்கா அதிக பலன் பெற்றுள்ளது: எச்1பி விசா குறித்து எலான் மஸ்க் கருத்து

அமெரிக்காவில் எச்1பி விசா திட்டம் மற்றும் குடியேற்றம் குறித்துத் தொடர்ந்து விவாதங்கள் நிலவி வரும் சூழலில், உலகப் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், திறமையான இந்தியர்களைப் பணியமர்த்துவதன் மூலம் அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

1,435 குடிமக்களின் 475 மில்லியன் திர்ஹாம் கடனை ரத்து செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) அரசு, தனது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, நாட்டில் உள்ள 1,435 குடிமக்களின் 475 மில்லியன் எமிரேட்ஸ் திர்ஹாம் (AED) மதிப்புள்ள கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறை: பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார்.

29 Nov 2025
இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: 120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

29 Nov 2025
இலங்கை

இலங்கையில் டித்வா புயலின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு

டித்வா புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

29 Nov 2025
விமானம்

விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு

ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

28 Nov 2025
இலங்கை

இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

28 Nov 2025
ஹாங்காங்

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது

ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

28 Nov 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பெருநகரப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை 8:11 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

27 Nov 2025
உலகம்

வேற்றுகிரகவாசிகளை தேடும் கூட்டுத் திட்டம்: பல நாடுகள் இணைந்து உருவாக்கி வரும் முப்பது மீட்டர் டெலஸ்கோப்

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.

10,000 ஆண்டுகளுக்குப் பின் எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது

எத்தியோப்பியாவில் சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை திடீரென வெடித்ததைத் தொடர்ந்து, கண்ணூரில் இருந்து அபுதாபிக்குச் சென்ற இண்டிகோ விமானம் 6E 1433, பாதுகாப்பு நடவடிக்கையாக அகமதாபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.

ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; IBSA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) சீர்திருத்தம் கொண்டு வருவது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயம் என்று வலியுறுத்தினார்.

ஜி20 உச்சி மாநாடு: உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை முன்மொழிந்தார்.

ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்

ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்

பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 Nov 2025
விசா

கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்

படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.

20 Nov 2025
இஸ்ரேல்

காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் புதிய தாக்குதல்: 25 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை (நவம்பர் 20) காசா நகரம் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் ஒரு புதிய தாக்குதலை நடத்தியுள்ளன.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டியது இந்தியாவின் கடமை; பங்களாதேஷ் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் ஆகியோரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ், இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

பங்களாதேஷில் கடந்த ஜூலை 2024 மாணவர் போராட்டத்தின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், பதவியில் இருந்து நீக்கப்பட்டப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது இரண்டு மூத்த உதவியாளர்களுக்கு எதிரானத் தீர்ப்பை சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இன்று வழங்கியது.

நவம்பர் 17: அடக்குமுறைக்கு எதிரான மாணவர் வீரத்தின் அத்தியாயம்; சர்வதேச மாணவர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி சர்வதேச மாணவர் தினம் (International Students Day) கொண்டாடப்படுகிறது.

16 Nov 2025
மெக்சிகோ

மேயர் கொலை, போதைப்பொருள் வன்முறைக்கு எதிராக மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்

மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதி; அத்தியாவசிய விவசாயப் பொருட்களுக்கான வரியை ரத்து செய்தார் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அத்தியாவசிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான வரியைக் குறைக்கும் நிர்வாக ஆணையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) கையெழுத்திட்டார்.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு வெளியாகிறது

பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICT) தனது தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (நவம்பர் 17) வழங்கவுள்ளது.

13 Nov 2025
ஐரோப்பா

வேட்டைக்காகப் பொதுமக்கள் சுட்டுக் கொலை: போஸ்னியா போரின் கொடூர பின்னணி அம்பலம்

ஐரோப்பாவில் 1992 முதல் 1995 வரை நீடித்த சரைவோ முற்றுகையின் போது, பணக்கார இத்தாலியர்கள் சிலர் பெரும் தொகையைச் செலுத்தி, வேடிக்கைக்காக அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கொல்ல போஸ்னியாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மிலன் அரசு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

11 Nov 2025
வணிகம்

'அமைதியாகப் போகிறேன்': பெர்க்ஷயர் ஹாத்வே பங்குதாரர்களுக்கு Warren buffet இறுதிக் கடிதம் 

பெர்க்ஷயர் ஹாத்வேயின் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி வாரன் பஃபெட், வருடாந்திர பங்குதாரர் கடிதங்களை எழுதுவதிலிருந்தும், பொதுவில் தோன்றுவதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மருத்துவ அதிசயம்: மூளையே இல்லாமல் பிறந்த பெண் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம்

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார்.

டிசம்பர் 10 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (நவம்பர் 10) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், நாட்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

09 Nov 2025
ஜப்பான்

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்

வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.

08 Nov 2025
நேபாளம்

இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்

நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.

08 Nov 2025
அமெரிக்கா

இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.