23 Nov 2025
INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 9: விஜய் சேதுபதியின் அணுகுமுறையில் ஓரவஞ்சனை இருப்பதாக முன்னர் போட்டியாளர் விமர்சனம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகளில் நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களைக் கையாளும் விதத்தில் ஓரவஞ்சனை உள்ளதாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் விமர்சகருமான ரவீந்திரன் சந்திரசேகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வர்த்தக ரகசிய முறைகேடு வழக்கு: டிசிஎஸ்ஸிற்கு $194 மில்லியன் அபராதத்தை உறுதி செய்த அமெரிக்க நீதிமன்றம்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்திற்கு எதிராக DXC டெக்னாலஜி தொடர்ந்த வர்த்தக ரகசியங்களை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில், அமெரிக்காவின் ஐந்தாவது சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Fifth Circuit Court of Appeals) $194 மில்லியன் (சுமார் ₹1,618 கோடி) இழப்பீட்டை நவம்பர் 21 ஆம் தேதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
தவறான தகவல்களைத் தடுக்க எக்ஸ் தளத்தில் புதிய அம்சம் வெளியீடு; இனி அனைத்து கணக்குகளின் இருப்பிடமும் தெரியவரும்
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான எக்ஸ், பயனர்கள் மத்தியில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தவறான தகவல்களைப் பரப்பும் போலி கணக்குகளைக் கண்டறியவும், "இந்த சுயவிவரம் பற்றி" (About This Profile) என்ற புதிய வெளிப்படைத்தன்மை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீண்ட நாள் கோப்பை வறட்சிக்கு முடிவு; ஆஸ்திரேலிய ஓபனில் லக்ஷ்யா சென் பட்டம் வென்றார்
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் (சூப்பர் 500) இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இந்த ஆண்டின் தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா: பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நிலுவை வழக்குகளைக் குறைக்க முன்னுரிமை; புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தல்
இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள நீதிபதி சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமாளிக்கவும், நாடு முழுவதும் வழக்குகளைத் தீர்க்க மத்தியஸ்த முறையை ஊக்குவிக்கவும் ஒரு தெளிவான செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
SIR பணியால் 37 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த அதிசயம்
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) பணியின் மூலம், ஒரு குடும்பம் 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தங்கள் மகனுடன் மீண்டும் இணைந்த அதிசயம் நடந்துள்ளது.
திடீரென பூமியைத் தாக்கிய ரகசிய சூரியப் புயல்: விஞ்ஞானிகளை வியக்க வைத்த மர்மமான நிகழ்வு
சூரியனில் இருந்து எந்தவிதமான முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறிகளும் இன்றி, 'ரகசிய சூரியப் புயல்' (Stealth Solar Storm) ஒன்று நவம்பர் 20 ஆம் தேதி பூமியை வந்தடைந்தது.
INDvsSA இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக இந்திய வம்சாவளி வீரர் செனுரன் முத்துசாமி சதம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி செனுரன் முத்துசாமி அடித்த முதல் டெஸ்ட் சதத்தின் (109) உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்து வலுவான நிலையை அடைந்தது.
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் கண்டுபிடிப்பு
பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு சபை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்; IBSA கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (IBSA) தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐநா சபையின் பாதுகாப்புச் சபையில் (UNSC) சீர்திருத்தம் கொண்டு வருவது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது ஒரு கட்டாயம் என்று வலியுறுத்தினார்.
மோட்டார் வாகனப் பாதுகாப்பிற்கு புதிய சகாப்தம்: பாரத் NCAP 2.0 விதிகள் 2027 முதல் அமல்
இந்திய சாலைப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் விதமாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) மேம்படுத்தப்பட்ட பாரத் NCAP 2.0 அமைப்பின் வரைவை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம்: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026 ரேஷன் கடைகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியானது
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பு
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
புதினா சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாத புதினா (Mint) இலைகள், வெறும் சுவைக்காக மட்டுமல்லாமல், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை முன்மொழிந்தார்.
123 வருட சாதனை முறியடிப்பு; நான்காவது இன்னிங்ஸில் அதிவேக சதம் அடித்து டிராவிஸ் ஹெட் உலக சாதனை
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட் மின்னல் வேகத்தில் சதம் விளாசிச் சாதனை படைத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு நம்பகமான ஆர்கெஸ்ட்ரா: 22 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டது குறித்து ராணுவத் தளபதி பேச்சு
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ஒரு "நம்பகமான ஆர்க்கெஸ்ட்ரா" என்று வர்ணித்துள்ளார்.
22 Nov 2025
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்; முதல்வர் இரங்கல்
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சீரான கல்லீரல் செயல்பாட்டுக்கு லிவர் டிடாக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் அவசியமா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
கல்லீரலைச் சுத்தம் செய்வதாகக் கூறி விற்கப்படும் லிவர் டிடாக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் மாத்திரைகள் மற்றும் மூலிகைச் சேர்க்கைகள், இந்தியாவில் பரவலாகக் கிடைக்கின்றன.
சினிமாவின் என்சைக்ளோபீடியா; சுந்தர் சி விலகலுக்கு பிறகு கமல்ஹாசன் குறித்து குஷ்பு கருத்து
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்ற நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.
புதுமைப் பெண் திட்டத்தில் அதிக பயனாளிகள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் இவைதான்; திட்டக்குழு தகவல்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப் பெண்' திட்டத்தில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட முதல் ஐந்து மாவட்டங்களின் பட்டியலை மாநிலத் திட்டக்குழு வெளியிட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: ஆப்பிரிக்காவில் 3 முக்கியத் திட்டங்களை வெளியிட்ட பிரதமர் மோடி
ஆப்பிரிக்காவில் முதன்முறையாக நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வளர்ச்சிக் கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்ததுடன், அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவது ஆகிய மூன்று முக்கியத் திட்டங்களை வெளியிட்டார்.
சக்கரவியூகம் போன்ற விவாத வலைகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 2025 இல் ராஜினாமா செய்த பிறகு, ஜக்தீப் தன்கர் முதல் முறையாகப் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவரா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 47 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான வெளியேற்றம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இனி கிராஜுவிட்டி பெற 5 ஆண்டுகள் தேவையில்லை; புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒரு ஆண்டாகக் குறைப்பு
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தரமல்லாத நிலையான கால ஊழியர்கள் (Fixed-Term Employees) கிராஜூவிட்டி (Gratuity) பெறுவதற்கான குறைந்தபட்ச சேவைக்காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது.
உங்கள் காரின் ஏசி வென்ட்களைச் சுத்தம் செய்வது எப்படி? ஆரோக்கியமான பயணத்திற்கான எளிய வழிமுறைகள்
காரில் உள்ள ஏசி (Air Conditioning) அமைப்பின் வென்ட்கள் (Vents) எளிதில் தூசி மற்றும் அழுக்குகளைச் சேகரித்து, அசுத்தமான காற்றை கார் உள்ளே அனுப்பும்.
நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்
மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜிமெயில் தகவல்களைப் பயன்படுத்தி ஏஐ பயிற்சி: வைரலாகும் வதந்திகளுக்கு கூகுள் மறுப்பு
ஜிமெயில் பயனர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் தரவுகளைப் பயன்படுத்தி, தனது ஜெமினி ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மாதிரியை ரகசியமாகப் பயிற்றுவிப்பதாகப் பரவி வரும் வதந்திகளை கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி' வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி; பின்னணி என்ன?
ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
காற்று மாசுபாட்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்; நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முன்பு குளிர்காலம் என்பது பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலமாக இருந்தது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஷாக்; இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 22) உயர்ந்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்... சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் அறிமுகம்
சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரில் மீண்டும் இரட்டை அடுக்கு கொண்ட டபுள் டக்கர் (Double Decker) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
38வது கேப்டனாகிறார் ரிஷப் பண்ட்; அதிக டெஸ்ட் கேப்டன்களைக் கொண்ட அணிகளில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் கழுத்துச் சுளுக்கு (neck spasm) காரணமாக விலகியதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர்-பேட்டரான ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
பிரீமியர் லீக் அணிகளுக்கான விதிகள் மாற்றியமைப்பு; 2026-27 சீசனில் அமலுக்கு வருகிறது
பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் அடுத்த 2026-27 சீசன் முதல் புதிய செலவு வரம்புகளை (Spending Caps) அறிமுகப்படுத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நைஜீரியாவில் பயங்கரம்: கத்தோலிக்கப் பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கடத்தல்
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜர் மாகாணத்தில் உள்ள அகவாரா சமூகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் நேற்று அதிகாலையில் ஆயுதம் தாங்கிய கும்பல் புகுந்து, 215 மாணவ மாணவிகளையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.