ஹார்முஸ் ஜலசந்தி: செய்தி
ஈரான்-இஸ்ரேல்- அமெரிக்கா போர் அமைதி பேச்சுவார்த்தை: 45 நாட்கள் போர்நிறுத்தத்தை முன்மொழிந்த சமரச நாடுகள்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு பெரும் அழிவைத் தவிர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக 45 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்காவும் ஈரானும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
'செவ்வாய் இரவு 8 மணி':ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் கொடுத்த கடைசி கெடு
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேலும் 24 மணிநேரம் நீட்டித்துள்ளார்.
'வில்லாவிலிருந்து போரை பார்க்கலாம்': கண்டனத்தை ஈர்க்கும் துபாய் ரியல் எஸ்டேட் முகவரின் விளம்பரம்
துபாயை சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான அபுபக்கர் சித்திக், ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கியவாறு அமைந்துள்ள ஆடம்பர வில்லாக்களுக்கான விளம்பர வீடியோ மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 90% அதிகரித்துள்ளது
மார்ச் மாதத்தில் இந்தியா ரஷ்யாவிலிருந்து தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக அதிகரித்துள்ளது.
'இந்தியா மட்டுமே மாலுமிகளை இழந்துள்ளது': ஈரான் போர் பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சகம்
ஐக்கிய ராச்சியத்தால் கூட்டப்பட்ட பலதரப்புக் கூட்டத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
"கவலைப்படாதீர்கள் இந்திய நண்பர்களே": ஹார்முஸ் ஜலசந்தி பதற்றத்திற்கு மத்தியில் இந்திய கப்பல்கள் நிலை குறித்து ஈரான் அறிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நிலவி வரும் கடும் போர் பதற்றங்களுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.
பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"இது எங்கள் போர் அல்ல": ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று அந்நாட்டுப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் புதன்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலியா
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாடு தழுவிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகளை புதன்கிழமை அன்று அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து முன்மொழிந்துள்ளன
பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மத்திய கிழக்குக்கான ஐந்தம்ச அமைதித் திட்டத்தை முன்மொழிந்துள்ளன.
வணிக சிலிண்டர் விலை ₹218 வரை உயர்வு - சென்னையில் புதிய விலை என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, இந்தியாவில் எரிவாயு விலையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
"நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!": எரிபொருள் தட்டுப்பாட்டால் தவிக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் அதிர்ச்சி வைத்தியம்
மத்திய கிழக்கு போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளுக்கு அதிரடியான மற்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய விதிகள்: அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை; இந்தியாவுக்கு?
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீது தனது முழுமையான அதிகாரத்தைச் செலுத்த ஈரான் புதிய மேலாண்மைத் திட்டத்தை வகுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிடினும், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் விருப்பம்: அறிக்கை
ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
"இதுவே கடைசி எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாகும்": ஈரானை மிரட்டும் ட்ரம்ப்
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் அந்நாட்டின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் இறங்கி வருகிறதா? அமெரிக்காவின் 15 அம்சத் திட்டத்திற்கு ஒப்புதல்?
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த 15 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான வர்த்தக எல்பிஜி ஒதுக்கீட்டை 70% ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு
எஃகு, ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் பிற தொழிலாளர் சார்ந்த தொழில்களை மையமாக கொண்டு, வர்த்தக திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஒதுக்கீட்டில் 20% அதிகரிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
'காரியங்களை செய்து முடிக்கும் தலைவர்': மோடியை பாராட்டும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை "காரியங்களைச் செய்து முடிக்கும் தலைவர்" என்று பாராட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது மத்திய அரசு; அதன் அர்த்தம் என்ன?
சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
மேற்கு ஆசியாவில் ஒரு மாதமாக நீடித்து வரும் போரில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை 10 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"வதந்திகளை நம்பாதீர்..60 நாட்களுக்கு பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு இல்லை": மத்திய அரசு
ஈரான்-வளைகுடா நாடுகளில் போர் நீடித்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது.
முதலமைச்சர்களுடன் பிரதமர் விர்ச்சுவல் சந்திப்பு: எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க 'டீம் இந்தியா' வியூகம்!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6:30 மணியளவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஹார்முஸ் மூடலுக்கு காரணமான ஈரான் கடற்படைத் தலைவர் அமெரிக்கா தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
LPG to PNG: மத்திய அரசின் அதிரடி மாற்றம் ஏன்? முக்கிய விளக்கங்கள்!
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே) நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை காரணமாக, இந்தியா தனது எரிசக்தி கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
இருட்டில் மூழ்கும் ஆசியா? பிலிப்பைன்ஸில் அவசரநிலை, இலங்கையில் மின்விளக்குகள் அணைப்பு
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரினால், ஒட்டுமொத்த ஆசிய கண்டமும் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்தியாவுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்; ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய நட்பு நாடுகளுக்கு அனுமதி
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற "நட்பு நாடுகளின்" கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என ஈரானிய வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
60 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது இந்தியா
அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி: போரின் நடுவே ஈரானின் 'சுங்கச் சாவடி'யாக மாறிய கடல் வழி
உலக நாடுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20 சதவீதத்தை விநியோகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, தற்போது ஒரு விசித்திரமான சூழலை சந்தித்து வருகிறது.
வளைகுடாவை விட்டு வெளியேறுமா அமெரிக்கா? ஈரானின் அதிரடி நிபந்தனைகளும், ட்ரம்ப்பின் 15 அம்ச அமைதித் திட்டமும்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளன.
"ஈரான் கொடுத்த மெகா பரிசு!": டிரம்ப்பின் அதிரடி அறிவிப்பால் உலகமே வியப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் ஒரு மிகப்பெரிய விட்டுக்கொடுத்தலை செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பு; ட்ரம்ப் கொடுத்த கிரீன் சிக்னல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நீடித்து வரும் அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் தனது நாட்டை ஒரு நடுநிலையான பேச்சுவார்த்தை களமாக மாற்ற முன்வந்துள்ளது.
வளைகுடா போர் பதற்றம்: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவசர ஆலோசனை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி, தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
"நீண்ட கால பாதிப்பு ஏற்படும்": மேற்கு ஆசியப் போர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை
மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசிய போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு
மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் 'பேச்சுவார்த்தை' கூற்றை மறுத்த ஈரான்; "பயந்து பின்வாங்கிய அமெரிக்கா" என அறிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்" நடைபெற்று வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதனை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய LPG கப்பல்கள் பயணம்; சமையல் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலக அளவில் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளன.
'மேற்கு ஆசியப் போர் ஒரு எச்சரிக்கை மணி': மக்களவையில் பிரதமர் மோடி கவலை
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார்.
LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிலிண்டர் அளவை குறைக்க மத்திய அரசு திட்டம்?
இந்தியாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) விநியோகத்தை பாதுகாப்பதற்காக ஒரு புதிய திட்டத்தைப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை தணித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் 'சுங்க வரி'? உலக நாடுகளை அச்சுறுத்தும் ஈரானின் அடுத்த அதிரடி
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு 'கடல்சார் போக்குவரத்து வரி' விதிக்க ஈரான் அரசு ஆலோசித்து வருகிறது.