LOADING...
"இது எங்கள் போர் அல்ல": ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்

"இது எங்கள் போர் அல்ல": ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2026
04:48 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று அந்நாட்டுப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் புதன்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான வழிகளைக் கண்டறிய உலகளாவிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும் என்றும் அவர் அறிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஸ்டார்மர், "என் மீதும் மற்றவர்கள் மீதும் எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பிரிட்டனின் தேசிய நலனைச் சார்ந்தே இருக்கும். இது எங்கள் போர் அல்ல என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்; இதில் நாங்கள் இழுக்கப்பட மாட்டோம்" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பொருளாதாரத் தாக்கம்

பொருளாதாரத் தாக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை

இரண்டாவது மாதமாக நீடிக்கும் இந்தப் போர், பிரிட்டனின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலை எதிர்கொள்ளப் பிரிட்டன் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும், நாட்டு மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நட்பு நாடுகளைப் போரில் இணையுமாறு வலியுறுத்தி வரும் சூழலில், ஸ்டார்மரின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

அமெரிக்கா

அமெரிக்காவின் நிலைப்பாடும் பிரிட்டனின் மாற்றமும்

ஏற்கனவே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டன் போரில் பங்கேற்க மறுத்துள்ளது அமெரிக்காவிற்குச் சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சர்வதேச வர்த்தகப் பாதையைப் பாதுகாப்பதில் பிரிட்டன் காட்டும் ஆர்வம் மற்ற நாடுகளுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. வரும் நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாடு, உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement