LOADING...
ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்
ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்

ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 20, 2026
08:32 am

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை தணித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஈரானியப் படைகள் வணிக கப்பல்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களையும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதையும் இந்த நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. "கடல்சார் பயண சுதந்திரம் என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதி. ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள சாமானிய மக்களை, குறிப்பாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களைப் பாதிக்கும்," என அக்கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எரிசக்தி

எரிசக்தி சந்தையில் தாக்கம்

போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய எரிவாயு விலை 60% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கத்தாரின் 'ராஸ் லப்பான்' எரிவாயு வளாகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, எரிவாயு விலை ஒரே நாளில் 35% எகிறியது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் ஒரு பேரலுக்கு 119 டாலர் வரை சென்றது. இந்த நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். IEA தனது அவசரகால பெட்ரோலிய இருப்புகளை வெளியிட அனுமதி அளித்துள்ளதை இந்நாடுகள் வரவேற்றுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20% எரிசக்தி விநியோகம் நடைபெறுவதால், இப்பாதையை மீண்டும் திறக்கத் தேவையான அனைத்து ராணுவ மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும் தாங்கள் தயார் என ஐரோப்பிய நாடுகள் உறுதியளித்துள்ளன.

Advertisement