இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
80 அதிகாரிகள் இருந்தும் காப்பாற்றப்படவில்லை; நொய்டா இளைஞரின் மரணத்தில் தந்தை கண்ணீர்
நொய்டாவைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா, கிரேட்டர் நொய்டாவின் செக்டார் 150 பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் உயிரிழந்தார்.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மூச்சுவிடத் திணறும் டெல்லி! அபாய கட்டத்தை தாண்டிய காற்று மாசுபாடு
இந்திய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான நிலையை எட்டியது. மாலை 4 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 440 ஆகப் பதிவாகியுள்ளது.
இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா? கவலையை விடுங்க! விடுபட்டவர்களுக்கு நாளை முதல் வினியோகம்; கூட்டுறவுத்துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் பறந்த மர்ம ட்ரோன்; ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் சதி? ராணுவம் தேடுதல் வேட்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்திலுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (ஜனவரி 17) இரவு ஒரு மர்ம ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டது.
டெல்லியில் காற்று மாசு படுமோசம்! மீண்டும் அமலுக்கு வந்த 'GRAP-4' கட்டுப்பாடுகள்; பள்ளிகள் மூடல், வாகனங்களுக்குத் தடை
தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (NCR) காற்று மாசு அளவானது (AQI) சனிக்கிழமை (ஜனவரி 17) மாலை 'மிகவும் மோசமான' (Severe) நிலையை எட்டியது.
மாடுபிடி வீரர்களுக்குக் கொண்டாட்டம்; இனி ஜல்லிக்கட்டில் வென்றால் அரசு வேலை; முதல்வர் ஸ்டாலினின் மாஸ் அறிவிப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்றது.
இந்திய விமானப்படைக்கு 114 புதிய ரஃபேல் ரக விமானங்கள்; ரஷ்யாவின் Su-57 ஐயும் குறிவைக்கும் இந்தியா
இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
விமானம் போன்ற வசதிகள்.. படுத்துக்கொண்டே பயணம்; நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 17) மேற்கு வங்கத்தின் மால்டா நகரத்தில் தொடங்கி வைத்தார்.
வங்கி வேலைக்காக தயாராகி வருகிறீர்களா? 2026-27 காலண்டர் வெளியீடு; உடனே செக் பண்ணுங்க!
வங்கி பணிகளுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு நடத்தும் முக்கிய அமைப்பான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு காலண்டரை வெளியிட்டுள்ளது.
சாபஹார் துறைமுகத் தடையில் விலக்கு கோரும் இந்தியா: அமெரிக்காவுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை
ஈரானில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் நீண்டகால மூலோபாயத் திட்டங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை (ED) ஆய்வு
வேலூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரி (CMC) மருத்துவமனை மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் (ED) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்தல்: ஜனவரி 20-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் வரும் ஜனவரி 20-ஆம் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 அதிரடி வாக்குறுதிகள்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு நான்கு மிகமுக்கியமான வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்: கடிதம் எழுதும் போட்டியில் வென்றால் ரூ.50,000 பரிசு, சுவிட்சர்லாந்துக்கு ட்ரிப்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக ஒரு தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.
ஈரானில் போர் மேகங்கள்? சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மத்திய அரசின் மெகா மீட்பு நடவடிக்கை நாளை ஆரம்பம்!
ஈரானில் தற்போது நிலவி வரும் பரவலான போராட்டங்கள் மற்றும் உள்நாட்டுப் பதற்றம் காரணமாக, அங்குள்ள பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது.
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்; 9 அம்ரித் பாரத் ரயில்களின் முழு விபரம்
மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
'இது அப்பட்டமான திருட்டு!' ஐ-பேக் சோதனையில் குறுக்கிட்ட மம்தா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
மேற்கு வங்காள ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் வியூக ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் கடந்த வாரம் அமலாக்கத்துறை (ED) சோதனையிட்டது.
13 ஆண்டுகாலக் கண்ணீர் போராட்டம்! ஹரிஷ் ராணாவுக்கு கண்ணியமான மரணம் கிடைக்குமா? தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா (32), கடந்த 2013 ஆம் ஆண்டு சண்டிகரில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது தங்கும் விடுதியின் 4 வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
இந்திய ராணுவ தினம் 2026: போர் முனையைத் தாண்டி ராணுவம் செய்யும் முக்கிய பணிகள்
இந்தியா வியாழக்கிழமை (ஜனவரி 15) தனது தேசிய ராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. 1949 ஆம் ஆண்டு இதே நாளில், ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத தென்காசி மாவட்ட கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பண்டிகை: பிரதமர் மோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து
தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கார்கிலில் ஈரான் தலைவர் காமேனிக்கு ஆதரவு போராட்டம்; டிரம்பின் பெயர் பொறித்த வெற்று சவப்பெட்டி அணிவகுப்பு
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை லடாக்கின் கார்கிலில் ஒரு பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்? அதிரடியாகக் குறைக்கப்பட்ட கட்-ஆஃப்!
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் 'பூஜ்யம்' (Zero Percentile) என மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது.
இந்தியா -அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம்! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மார்கோ ரூபியோவுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23 ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தரவுள்ளார்.
சீனா உரிமைகொண்டாடும் இந்தியாவின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு: ராணுவத் தலைவர் கூறுவது என்ன?
ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு மீதான சீனாவின் உரிமைகோரல்களை இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நிராகரித்து, பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான 1963 எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.
'ஒவ்வொரு நாய் கடிக்கும், நாங்கள்...மாநிலங்களுக்கு அதிக இழப்பீடு நிர்ணயிப்போம்': உச்ச நீதிமன்றம் கடுப்பு
செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தெருநாய் தாக்குதல்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பி, மாநிலங்கள் மற்றும் நாய் பிரியர்களின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கியது.
'ஜன நாயகன்' திரைப்பட விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி
நடிகரும், TVK தலைவருமான விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தமிழ் கலாச்சாரத்தை தாக்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
'தமிழ்நாட்டிலிருந்து பிச்சைக்காரன்': பாஜகவின் அண்ணாமலையை கடுமையாக சாடிய சிவசேனா
பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் அண்ணாமலை மீதான தாக்குதலை சிவசேனா (UBT) தீவிரப்படுத்தியுள்ளது.
'தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருந்தோம்': ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ தலைவர் பெருமிதம்
பாகிஸ்தான் ஏதேனும் தவறான சாகசத்தை முயற்சித்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரைவழி தாக்குதலை நடத்த ஆயுதப்படைகள் தயாராக இருந்ததாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
குடியரசு தினம்: டெல்லி விமான நிலையம் மூடப்படும் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஜனவரி 21 முதல் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆறு நாட்களுக்கு தினமும் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் வான்வெளி மூடப்படும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கைரேகை பதியாவிட்டாலும் பொங்கல் பரிசு உண்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
வட இந்தியாவில் உறையும் குளிர்! மைனஸ் டிகிரிக்குச் சென்ற வெப்பநிலை
வட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் குளிர் அலை வீசி வருகிறது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஜெர்மனி கொடுத்த செம ஆஃபர்; விசா இல்லாமல் இனி பயணிக்கலாம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்தியக் குடிமக்களுக்கு மிக முக்கியமான சலுகை ஒன்றை ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.
கரூர் விபத்து வழக்கு: டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நடிகர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
எதிரி நாட்டு பீரங்கிகளுக்கு செக்! டிஆர்டிஓவின் சோதனை வெற்றி; நகரும் இலக்கையும் விடாமல் வேட்டையாடும் இந்திய ஏவுகணை
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேன்-போர்ட்டபிள் ஆன்டி-டேங்க் கைடட் ஏவுகணையை (MPATGM) திங்கட்கிழமை (ஜனவரி 12) டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இரண்டு முறை சுயநினைவை இழந்ததால் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், வார இறுதியில் இரண்டு முறை சுயநினைவை இழந்ததால், புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 14-க்கு பிறகு பிரதமர் மோடி புதிய அலுவலகத்திற்கு மாறுகிறாராம்
ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தை ரைசினா மலைக்கு அருகிலுள்ள ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவார் என்று கூறப்படுகிறது.