LOADING...
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
11:40 am

செய்தி முன்னோட்டம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருக்குறளின் உன்னதத்தையும், திருவள்ளுவரின் அறிவாற்றலையும் போற்றியுள்ளதோடு, அனைவரும் திருக்குறளை வாசிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது 'X' சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள செய்தியில், "திருவள்ளுவர் தினமான இன்று, பல கோடி மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் சிந்தனைகளைக் கொண்ட பன்முக ஆளுமை கொண்ட திருவள்ளுவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். கருணையும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகத்தை அவர் கனவு கண்டார். தமிழ்க் கலாச்சாரத்தின் மிகச்சிறந்த அடையாளமாக அவர் திகழ்கிறார்," என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement