அமெரிக்கா: செய்தி
ஹமாஸ் ஆதரவு செய்திகளால் அமெரிக்கா, கனடா விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டன
செவ்வாயன்று கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள பல விமான நிலையங்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2028 வரை அமெரிக்காவின் கிரீன் கார்டு விசாவிற்கான லாட்டரியில் இந்தியர்கள் பங்கேற்க முடியாது; காரணம் என்ன?
அமெரிக்காவின் பன்முகத்தன்மை விசா (DV) லாட்டரி திட்டத்தில் இந்திய நாட்டினருக்குக் குறைந்தபட்சம் 2028 ஆம் ஆண்டு வரை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
H-1B விசா கட்டண உயர்வு: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க வர்த்தக சம்மேளனம் வழக்கு
அமெரிக்காவில் புதிய H-1B விசாக்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் உயர்த்தியதற்கு எதிராக, அமெரிக்க வர்த்தக சம்மேளனம் (U.S. Chamber of Commerce) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
காசா போர் ஓவர், அடுத்தது ரஷ்யா-உக்ரைன் போர்; புடினை நேரில் சந்திக்கவுள்ளார் டிரம்ப்
உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, புடாபெஸ்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய் குறித்து மோடி-டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்கள் ஏதும் நடக்கவில்லை: MEA
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்குவதை இந்தியா குறைப்பதாக டிரம்ப் கூறியதற்கு மத்திய அரசு பதில் இதுதான்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்; சீனாவிற்கும் நெருக்கடி தரப்போகிறாராம்!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா இல்லை; இந்தியாவின் இடம் எது தெரியுமா?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவின் பாஸ்போர்ட் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்திய வம்சாவளி பிரபல அமெரிக்க ஆய்வாளர் ஆஷ்லே டெல்லிஸ் கைது: என்ன காரணம்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காசா அமைதி உச்சி மாநாட்டில் "நல்ல நண்பர்" மோடிக்கு புகழாரம் தந்த டிரம்ப்
எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரை பாராட்டியதுடன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதியை கொண்டு வந்ததற்காக 'பெருமை' தெரிவித்தார்.
தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை
செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.
நோபல் பரிசு உங்களுக்கு தான்: போர் நிறுத்த எதிரொலியாக டிரம்ப்பை புகழ்ந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு திங்களன்று இஸ்ரேலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காசா போர் முடிந்தது: இஸ்ரேலுக்கு புறப்பட்டார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக பொறுப்பேற்கும் செர்ஜியோ கோர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை சனிக்கிழமை (அக்டோபர் 11) புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் (MEA) சந்தித்தார்.
சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) சீன இறக்குமதிகள் மீது கூடுதலாக 100 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம்; நோபல் குழு மீது அமெரிக்கா கடும் விமர்சனம்
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சிச் செயற்பாட்டாளரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நோபல் குழுவின் முடிவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) கடுமையாக விமர்சித்துள்ளது.
டிரம்ப் மிகவும் எதிர்பார்த்த நோபல் பரிசு மிஸ் ஆனது! அவரது ரியாக்ஷனை எதிர்கொள்ள தயார் நிலையில் நார்வே
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு டொனால்ட் டிரம்பிற்கு கிடைக்கவில்லை.
'ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை எதுமே செய்யாமல் வென்றார்': புலம்பும் டிரம்ப்
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடி பராக் ஒபாமாவின் வெற்றியை தகுதியற்றது என்று கூறினார்.
பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் வழங்கப்படவில்லை, ஆதரவு மட்டுமே: அமெரிக்கா கொடுத்த ட்விஸ்ட்
பாகிஸ்தானுக்கு மிகவும் மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
காசா அமைதி ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இரு தலைவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதித் திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர-வரம்பு வான் முதல் வான் ஏவுகணை (AMRAAM) விற்பனைக்கான ஆயுத ஒப்பந்தத்தில், பாகிஸ்தானையும் பெறுநராக அமெரிக்காவின் போர் துறை (DoW) சேர்த்துள்ளது.
அரசாங்க முடக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கிறதா?
அமெரிக்க பொருளாதாரம் பலவீனமான அறிகுறிகளை காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது, ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு பல நிபுணர்களால் கணிக்கப்பட்ட மந்தநிலையைத் தவிர்க்க முடிந்தது.
2025 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு? காசா போரை நிறுத்திய டிரம்ப்புக்கா?
உலகின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு பெற விரும்பும் வேட்பாளர்கள் பட்டியலில் இருந்தாலும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் பரிசு பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு: டிரம்ப்
காசாவில் சண்டையை நிறுத்தி, பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
"டிரம்ப் சொன்னா என்ன? நாங்க தருவோம்": H-1B விசாக்களை ஆதரிக்கும் என NVIDIA உத்திரவாதம்
NVIDIA தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், அவரது நிறுவனம் H-1B விசாக்களை தொடர்ந்து நிதியுதவி செய்வதாகவும், அது தொடர்பான அனைத்து செலவுகளையும் ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு வான் ஏவுகணைகளை அளிக்க போவதாக அமெரிக்கா அறிவிப்பு
பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய கட்டத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) அறிவித்துள்ளது.
போதை வஸ்து பெயரில் சென்ட் பாட்டில் வைத்திருந்ததற்காக அமெரிக்கா விசாவை இழந்த இந்தியர்
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபில் ரகு, "ஓபியம்" என்று பெயரிடப்பட்ட வாசனை திரவிய பாட்டிலைப் பற்றி அதிகாரிகளின் தவறான புரிதலினால் ரத்து செய்யப்பட்ட தனது விசாவை மீண்டும் பெற போராடி வருகிறார்.
'நாங்கள் அமைதி காக்கும் படையினராக இருப்பதற்குக் காரணம்...': இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் மீண்டும் பிதற்றல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கைகள் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தவிர்க்க உதவியதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
அரிய கனிமங்களின் முதல் தொகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது பாகிஸ்தான்: ரகசிய ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை
அமெரிக்க நிறுவனமான யுஎஸ் ஸ்ட்ராடஜிக் மெட்டல்ஸுடன் (யுஎஸ்எஸ்எம்) கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது முதல் அரிய வகை கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அரசாங்க முடக்கம் தொடர்ந்தால் பெருமளவிலான பணிநீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை
பகுதி அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக காங்கிரஸ் ஜனநாயக கட்சியினருடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வெற்றிபெறவில்லை என்றால், கூட்டாட்சி ஊழியர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் நண்பனை கொல்வது எப்படி என சாட்ஜிபிடியில் தேடிய பள்ளி மாணவன் கைது
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 13 வயது இளைஞன் ஒருவன், பள்ளி வழங்கிய சாதனத்தைப் பயன்படுத்தி ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடியிடம் வகுப்பறையின் நடுவில் நண்பரைக் கொல்வது எப்படி என்று கேட்டதால் கைது செய்யப்பட்டுள்ளான்.
காசா பேச்சுவார்த்தையை விரைவாக முடிங்க, இல்லைனா 'இரத்தக்களரி ஆகும்': எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
திங்கட்கிழமை காசாவிற்கான அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பேச்சுவார்த்தையாளர்கள் "விரைவாக முன்னேற வேண்டும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க்கில் அமெரிக்காவின் முதல் வர்த்தக LiFi இணையத்தை நிறுவி இந்திய நிறுவனம் சாதனை
குஜராத்தைச் சேர்ந்த நவ் வயர்லெஸ் டெக்னாலஜிஸ் (Nav Wireless Technologies), நியூயார்க் நகரத்தில் அமெரிக்காவின் முதல் வர்த்தக LiFi இணைய அமைப்பை நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரான் எல்லை அருகே அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் அழைப்பு
அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்குமான உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அரபிக் கடலில் ஒரு துறைமுகத்தை அமைத்து இயக்குவதற்கு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாய்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவை விட இந்தியா தான் பெஸ்ட்; வைரலாகும் அமெரிக்கப் பெண்மணியின் இன்ஸ்டாகிராம் பதிவு
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் அமெரிக்கப் பெண்மணியான கிரிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தான் அனுபவிக்கும் 10 குறிப்பிடத்தக்க நன்மைகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் என்ன தவறு என கேட்கும் புடின்
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு
அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது.
4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நான்கு வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் முடக்கம்: என்ன சேவைகள் இயங்கும், எவை மூடப்படும்?
குடியரசு கட்சி நிதியுதவி தொகுப்பை ஆதரிக்க செனட் ஜனநாயக கட்சியினர் மறுத்ததை அடுத்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கப்பட்டுள்ளது.
செனட் வாக்கெடுப்பு தோல்வி; அரசாங்க முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்கா
நவம்பர் 21 வரை அரசாங்கத்திற்கு நிதியளிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக, குடியரசுக் கட்சியினரால் உருவாக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்கான கடைசி முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அமெரிக்க அரசாங்கம் முறையான முடக்கத்தை நோக்கிச் செல்கிறது.