இஸ்ரேல்: செய்தி
'பெகாசஸைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கேள்வி அது யாருக்கு எதிரானது': SC
ஒரு நாடு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஸ்பைவேரைப் பயன்படுத்துவதில் அடிப்படையில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் முக்கிய கவலை, அந்த தொழில்நுட்பம் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பாலஸ்தீன குழுக்கள் 'சரணடைய' வேண்டும் என்ற இஸ்ரேலின் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்தது
காசாவில் உள்ள அனைத்து ஆயுதமேந்திய அமைப்புகளும் இஸ்ரேலிடம் "சரணடைய" வேண்டும் என்ற போர்நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
கே.எஃப்.சி, பாட்டா உள்ளிட்ட கடைகளை குறி வைக்கும் கும்பல்; மீண்டும் பதட்டத்தில் வங்கதேசம்
இந்த வார தொடக்கத்தில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக வெடித்த புதிய போராட்டங்களை கண்டிக்கும் நோக்கத்தில் மீண்டும் வங்கதேசத்தில் போராட்டம் துவங்கியுள்ளது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தித்தாளின் அறிக்கையின்படி, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ரத்வான் படையின் மூத்த தளபதி அகமது அட்னான் பாஜிஜாவுடன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
அமெரிக்கா ஒப்புதலுடன், காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; 100க்கும் மேற்பட்டோர் பலி
ஜனவரி முதல் நீடித்து வந்த பலவீனமான போர்நிறுத்தத்தை முறியடித்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர்.
அதிர்ச்சி; கர்நாடகாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) இரவு நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், 27 வயது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி மற்றும் ஹோம்ஸ்டே உரிமையாளர் ஆகியோர் மூன்று ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தில் ஒரு மாதம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர்கள் மீட்பு; இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நடவடிக்கை
ஒரு மாதத்திற்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை கிராமத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பத்து இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இரவு முழுவதும் நடத்தப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணையம் உறுதிப்படுத்தியது.
இஸ்ரேலில் 3 பேருந்துகள் வெடித்துச் சிதறின: குண்டுவெடிப்பு சதி என சந்தேகம்
வியாழக்கிழமை, இஸ்ரேலின் மத்திய பகுதியில் ஒரு வாகன நிறுத்துமிடத்தில் மூன்று பேருந்துகள் மீது தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
குழந்தை கிஃபிர் பிபாஸ் மற்றும் குடும்பத்தினரின் சடலத்தை ஒப்படைக்கும் ஹமாஸ்; துக்க நாளாக அனுசரிக்கும் இஸ்ரேல்
ஹமாஸ் தன்வசம் வைத்திருந்த இஸ்ரேலின் இளம் வயது பணயக்கைதியான ஒன்பது மாத குழந்தை கிஃபிர் பிபாஸ், அவரது நான்கு வயது சகோதரர் ஏரியல், அவர்களின் தாய் ஷிரி பிபாஸ் மற்றும் மற்றொரு பணயக்கைதி ஓடெட் லிஃப்ஷிட்ஸ் ஆகியோரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் முறிந்து விடுமோ என்ற அச்சத்தில் திட்டமிட்டபடி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ்
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, மத்தியஸ்தர்களுடன் "நேர்மறையான" பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, திட்டமிட்டபடி இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸ் சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா போர்நிறுத்தம் முடிவுக்கு வரும்: நெதன்யாகு
சனிக்கிழமை நண்பகலுக்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும், இல்லையென்றால்...: ஹமாஸிற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து விலகியது: அதன் அர்த்தம் என்ன என்பதை அறிக
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) உள்ளிட்ட பல ஐக்கிய நாடுகள் சபை (UN) அமைப்புகளில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதற்கான நிர்வாக உத்தரவில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 50 பாலஸ்தீனியர்கள் பலி
வடக்கு மேற்குக் கரையில் பெரிய அளவிலான தாக்குதலில் 50 பாலஸ்தீனிய ஆயுதமேந்தியவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்தது.
மார்ச் மாதம் மீண்டும் ஹமாஸுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும்; இஸ்ரேல் பிரதமருக்கு நெருக்கடி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் தீவிர அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதால், காசா போர்நிறுத்தத்தின் முதல் கட்ட முடிவைத் தொடர்ந்து ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தாமதங்கள் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு பிறகு ஒருவழியாக அமலுக்கு வந்தது இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உள்ளூர் நேரப்படி காலை 11.15 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்கியது.
ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்; ஒப்பந்தம் எப்போது அமலுக்கு வரும்?
இஸ்ரேலின் அமைச்சரவை ஹமாஸுடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது பெரும் அழிவை ஏற்படுத்திய 15 மாத மோதலுக்கு சாத்தியமான முடிவைக் குறிக்கிறது.
கடைசி நிமிட சிக்கலுக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
15 மாத காசா போர் முடிவுக்கு வந்தது; ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல்- ஹமாஸ் தரப்பு
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரில் சிக்கியுள்ள இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம்; இன்று இரவு வெளியாகலாம் என தகவல்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சாத்தியமான போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று (ஜனவரி 14) அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் உயர்மட்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) புதன்கிழமை, ஜனவரி 1, 2025 அன்று, மூத்த ஹமாஸ் தளபதி அப்துல்-ஹாடி சபாவை அகற்றிவிட்டதாக உறுதிப்படுத்தியது.
காசா மருத்துவமனையில் சோதனை; 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்தது இஸ்ரேல்
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையின் போது பல மருத்துவ ஊழியர்கள் உட்பட 240க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை யேமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் வான்வழி குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஈரானில் ஹமாஸ் தலைவர் ஹனியேவை கொன்றதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
"மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகிவிடும்": ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்னதாக காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகம்" போல நிலைமை மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு
'என் மீது சுமத்திய போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது ICC
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா லெபனானிடம் சமர்ப்பித்தது
இஸ்ரேலுக்கும், ஹெஸ்புல்லாவுக்கும் இடையே நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, லெபனானிடம் போர் நிறுத்த வரைவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேஜர் தாக்குதல்களை செய்தது நாங்கள் தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹெஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார்.
காஸாவில் கொல்லப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; ஐநா சபை தகவல்
காஸாவில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் கிட்டத்தட்ட 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்தியுள்ளது.
நம்பிக்கையிழந்த காரணத்தால் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து துரத்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை கையாள்வதில் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, தனது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்கா வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவத்தை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி; 80 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு உரிய பதிலடி; ஈரான் எச்சரிக்கை
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை ஈரானிய ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, எந்தவொரு இஸ்ரேலிய நடவடிக்கைக்கும் உரிய எதிர்வினை இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணம் கசிவு
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சாத்தியமான பதிலடித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்க அரசின் மிகவும் இரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்று சனிக்கிழமை (அக்டோபர் 19) நடத்தப்பட்டது.
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் வீரர்கள் அடையாளம் கண்டது இப்படித்தான்!
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான கொடிய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், அக்டோபர் 16 அன்று இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் கொல்லப்பட்டார்
அக்டோபர் 7, 2023 படுகொலையின் பின்னணியில் இருந்த ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் (IDF) கொல்லப்பட்டதை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழன் அன்று உறுதிப்படுத்தினார் .