NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
    ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இஸ்ரேல்

    இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 27, 2024
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

    இது லெபனானில் மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழியை வகுத்தது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் செவ்வாயன்று அறிவித்தது.

    "அரசியல்-பாதுகாப்பு அமைச்சரவை இன்று மாலை அமெரிக்காவின் ஆதரவு பெற்ற லெபனானில் ஒரு போர்நிறுத்த ஏற்பாட்டிற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இஸ்ரேல் இந்த செயல்பாட்டில் அமெரிக்காவின் பங்களிப்பை பாராட்டுகிறது மற்றும் எனினும் அதன் (இஸ்ரேல்) பாதுகாப்பிற்கு எதிராக ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் செயல்படுவதற்கான உரிமையையும் வலியுறுத்துகிறது " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் பிரான்ஸால் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நவம்பர் 27 அன்று அதிகாலை 4 மணிக்கு அமலுக்கு வந்தது.

    ஒப்பந்தம்

    பிரான்ஸ், அமெரிக்கா முன்னெடுத்த போர் நிறுத்த ஒப்பந்தம்

    இஸ்ரேலின் ஒப்புதலுக்குப் பிறகு, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

    அதன்படி ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய இரு நாடுகளும் இஸ்ரேல் மற்றும் லெபனானுடன் இணைந்து செயல்பட உள்ளதாக உறுதியளித்தன.

    "இந்த மோதல், வன்முறையின் மற்றொரு சுழற்சியாக மாறுவதைத் தடுக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    மேலும் லெபனான் ஆயுதப் படைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதற்கும் லெபனானின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்கள் உறுதியளித்தனர்.

    கடந்த ஆண்டில் துவங்கிய போரில் லெபனானில் கிட்டத்தட்ட 3,800 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 16,000 படுகாயம் அடைந்தனர்.

    ஒப்பந்த அறிக்கை

    ஒப்பந்தத்தின்படி திரும்பபெறப்படும் துருப்புகள்

    லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் வெளியேற வேண்டும் மற்றும் லெபனானின் இராணுவம் அதன் எல்லைக்குள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, லிட்டானி ஆற்றின் தெற்கே எல்லையில் ஹெஸ்பொல்லா தனது ஆயுத பயன்பாட்டையும் முடிவுக்குக் கொண்டுவரும்.

    போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி ஆகியோரிடமும் பேசினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர்
    பெஞ்சமின் நெதன்யாகு

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    இஸ்ரேல்

    ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து ஹமாஸ் தலைவராக யாஹ்யா சின்வாரை தேர்வு  ஹமாஸ்
    மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை ஈரான்
    காஸா போரினால் தடைப்பட்ட IVF சிகிச்சை; 'அதிசய' குழந்தைகளை எண்ணி புலம்பும் பெற்றோர்  குழந்தைகள்
    இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்; கெய்ரோ போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    எத்தனை இஸ்ரேலிய பணயக்கைதிகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று 'தெரியவில்லை': ஹமாஸ் அதிகாரி  ஹமாஸ்
    ப்ராஜெக்ட் நிம்பஸ் சர்ச்சை: 1,100 மாணவர்கள் கூகுள், அமேசானை புறக்கணிப்பதாக அறிவிப்பு கூகுள்
    இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்  இஸ்ரேல்
    ராக்கெட் தாக்குதலில் 12 குழந்தைகளை கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல்-ஹெஸ்புல்லா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது இஸ்ரேல்

    போர்

    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    இஸ்ரேல் இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய பயங்கரமான காட்சிகள் வெளியானது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    பெஞ்சமின் நெதன்யாகு

    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025