ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 1ஆம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு ஈரானில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று செய்தி நிறுவனம் ஏபி தெரிவித்துள்ளது.
ஏறக்குறைய ஒரு வாரமாக இஸ்ரேலால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய கோரத்தாண்டவத்திற்கு பிறகு அங்கு முழு பதற்றமான நிலைமை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
துல்லிய பதிலடி தாக்குதல்
துல்லிய பதிலடி தாக்குதல்: இஸ்ரேல் ஈரானைத் தாக்கியது ஏன்?
இம்மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக சனிக்கிழமை ஈரானின் ராணுவ இலக்கு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹமாஸ்-இஸ்ரேல் போரில் நேரடியாக நுழைந்த ஈரானைப் பழிவாங்குவதாக இஸ்ரேல் சபதம் செய்தது.
பதிலடித் தாக்குதல் குறித்து ஈரானுக்கு இஸ்ரேல் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்தத் தாக்குதல் ஆச்சரியமாக இல்லை.
இதற்கிடையே, ஈரான் நாட்டில் உள்ள ஊடகங்களும், தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள பல இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதை உறுதி செய்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் எக்ஸ் பதிவு
In response to months of continuous attacks from the regime in Iran against the State of Israel—right now the Israel Defense Forces is conducting precise strikes on military targets in Iran.
— Israel Defense Forces (@IDF) October 25, 2024
The regime in Iran and its proxies in the region have been relentlessly attacking… pic.twitter.com/OcHUy7nQvN