NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு
    மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு

    அதிகரிக்கும் போர்ப்பதற்றம்; மத்திய கிழக்கிற்கு கூடுதல் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 02, 2024
    08:36 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) அன்று மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவத்தை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    இதில் பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டுவீச்சு விமானங்கள் அடங்கும்.

    ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது.

    "ஈரான், அதன் கூட்டாளிகள் அல்லது அதன் பிரதிநிதிகள் இந்த தருணத்தை அமெரிக்க பணியாளர்கள் அல்லது பிராந்தியத்தில் உள்ள நலன்களை குறிவைக்க பயன்படுத்தினால், அமெரிக்கா எங்கள் மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்." என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கர்களின் பாதுகாப்புக்கு எனக் கூறினாலும், இவையனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    கூடுதல் துருப்புகள்

    தேர்தலுக்கு பிறகு கூடுதல் துருப்புகள் வரும்

    கடந்த மாத இறுதியில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு உட்பட, தரையில் அமெரிக்க துருப்புக்களால் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய படைகள் வரும் மாதங்களில் வரத் தொடங்கும் என்று ரைடர் கூறினார்.

    அமெரிக்காவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முடிந்த பிறகு இந்த படை நகர்த்துதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, கடந்த அக்டோபர் 26 அன்று இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக குறிப்பிடத்தக்க தாக்குதல்களை நடத்தியது.

    ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், முக்கியமான அணுசக்தி மற்றும் எண்ணெய் தளங்களில் எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை.

    இது ஈரான் 2024 அக்டோபர் தொடக்கத்தில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    மத்திய கிழக்கு
    இஸ்ரேல்
    ஈரான்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    அமெரிக்கா

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்; குவாட் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் குவாட் குழு
    கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு 7.5 மில்லியன் டாலர்; குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு பிரதமர் மோடி
    தானியங்கி வாகனங்களில் சீன மென்பொருள் மற்றும் வன்பொருட்களுக்கு தடை; அமெரிக்கா அதிரடி முடிவு சீனா
    19.5 மில்லியன் டாலர் செலவில் செயற்கை நட்சத்திரத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா திட்டம் நாசா

    மத்திய கிழக்கு

    டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர் அமெரிக்கா
    குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார்  உள்துறை
    ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்? ஈரான்
    அடுத்தடுத்து 140 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்; இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்தது ஹிஸ்புல்லா இஸ்ரேல்

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீது 'நேரடி' தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு ஈரான்
    அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார் ஹமாஸ்
    ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஈரான்

    'அடுத்த பதிலடி அதிகபட்ச அளவில் இருக்கும்': இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை ஈரான் இஸ்ரேல் போர்
    இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா: மோதலில் இருந்து ஈரான்-இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல்  இஸ்ரேல்
    ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது  கேரளா
    ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் ஈரான் இஸ்ரேல் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025