357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு
ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
10 ஆண்டுகளில் இரட்டிப்பான இந்தியாவின் ஜிடிபி; ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விரைவில் விஞ்சும் என எதிர்பார்ப்பு
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) 2015ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலரிலிருந்து 2025ஆம் ஆண்டில் 4.3 டிரில்லியன் டாலராக இரட்டிப்பாக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார மைல்கல்லை அடையும் பாதையில் உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்க ஒப்பந்த உற்பத்தி உத்தியை கையிலெடுக்கும் டெஸ்லா
அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, அதன் சந்தை நுழைவு உத்தியின் ஒரு பகுதியாக இந்தியாவில் ஒப்பந்த உற்பத்தி கூட்டாண்மைகளை ஆராய்ந்து வருகிறது.
சென்னையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்தார் விருந்து வழங்கும் இந்து கோயில்; ஆச்சரிய பின்னணி
சென்னை மைலாப்பூரில் உள்ள சுஃபிதார் கோயில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்து வருகிறது.
ஐபிஎல் 2025 தொடக்கவிழாவில் நடிகர் சூர்யாவின் ஆயுத எழுத்து பட பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்
கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் 2025 தொடக்க விழா ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குரலால் ரசிகர்களை முழுமையாக கவர்ந்திழுத்தார்.
ஐபிஎல் 2025 கேகேஆர்vsஆர்சிபி: டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு
ஐபிஎல் 2025 முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை (ஆர்சிபி) எதிர்கொள்கிறது.
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 20 ஆண்டுகளுக்கு முந்தைய சச்சின் படத்தின் ரீரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான சச்சின் திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025: சிறந்த ஃபீல்டிங் கொண்ட டாப் 3 அணிகள்
ஐபிஎல் 2025 சீசன் சனிக்கிழமை (மார்ச் 22) தொடங்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி இரண்டு மாத காலம் கொண்டாட்டமாக இருக்கப் போகிறது.
விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் தினசரி அலவன்ஸ் வெறும் $5 தானா; டொனால்ட் டிரம்ப் பதில்
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த பிறகு இந்த வாரம் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கான ஓவர்டைம் ஊதியம் குறித்து டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி; சம்பூர் சூரிய மின் நிலையத்திற்கான பணிகளை தொடங்கி வைக்கிறார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க அறிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கான அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம், அடுத்த சுற்று விவாதங்களை தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடத்துவது என்ற முக்கிய முடிவுடன் நிறைவடைந்தது.
இந்தியாவில் 1 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; ஆன்லைன் மோசடி தொடர்பாக நடவடிக்கை
ஆன்லைன் மோசடியைத் தடுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், ஜனவரி 2025 இல் கிட்டத்தட்ட ஒரு கோடி (10 மில்லியன்) இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.
தமிழக முதல்வரின் தொகுதி மறுவரையறை கூட்டத்தை ஆந்திரா, மேற்குவங்கம் புறக்கணிப்பு; காரணம் என்ன?
2026 க்குப் பிறகு வரவிருக்கும் தொகுதி நிர்ணய செயல்முறையின் தாக்கம் குறித்து விவாதிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார்.
தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, ஆனால்.. கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
2026க்கு பிறகு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்த கவலைகள் குறித்து விவாதிக்க சென்னையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
ஐபிஎல்லிற்காக இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது வோடபோன் ஐடியா
ஐபிஎல் 2025 தொடங்க உள்ள நிலையில், வோடபோன் ஐடியா (விஐ) இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக நீர் தினம் 2025: பனிப்பாறை பாதுகாப்புக்கான அவசர அழைப்பும் நன்னீர் மேலாண்மையும்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக நீர் தினம் நன்னீர் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
லடாக் பிராந்தியத்தில் சீனா புதிய மாவட்டங்களை அறிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனம்
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வரும் பகுதிகளை உள்ளடக்கி, சீனா தனது ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டிரம்ப் புதிய உத்தரவு; மனிதாபிமான பரோலில் வந்த 5 லட்சம் பேரை நாடு கடத்துகிறது அமெரிக்கா
கியூபா, ஹைத்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து வந்த 5,32,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரின் சட்டப் பாதுகாப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ரத்து செய்ய உள்ளது.
நிதி அமைச்சகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து வங்கி ஊழியர்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம் வாபஸ்
நிதி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் நேர்மறையான உறுதிமொழிகளைத் தொடர்ந்து, மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வங்கி தொழிற்சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன.
ஆரஞ்சு அலெர்ட்; ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டிக்கு வருண பகவான் வழி விடுவாரா?
ஐபிஎல் 2025 தொடக்க விழா மற்றும் முதல் போட்டி வானிலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
ஏப்ரல் முதல் வாகன விலைகளை 3% வரை உயர்த்துவதாக மஹிந்திரா அறிவிப்பு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஏப்ரல் 2025 முதல் அதன் எஸ்யூவி மற்றும் வணிக வாகன வரம்பில் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.
பயனர் தரவைத் திருடும் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்
பயனர் தரவைத் திருடுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் சுமார் 300 செயலிகளை பிளேஸ்டோரிலிருந்து அகற்றியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை; உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இடமாற்றம், பண மீட்பு தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஊகங்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நிராகரித்தது.
சென்னையில் உள்ள தெருவுக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயர் வைக்க ஒப்புதல்
சென்னையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு தனித்துவமான கௌரவத்தைப் பெற உள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் 30 அல்லது 31; ரம்ஜான் பண்டிகை எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது
மிக முக்கியமான இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான ஈத்-உல்-பித்ர் எனப்படும் ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியானது
நடிகர் சூர்யாவின் வரவிருக்கும் படமான ரெட்ரோ திரைப்படக் குழு, விவேக் பாடல் வரிகளுடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய கனிமா பாடலை வெளியிட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (மார்ச் 22) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் டொயோட்டாவின் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பெங்களூரில் அமைகிறது
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் அதன் உள்ளூர் துணை நிறுவனம் மூலம் இந்தியாவில் அதன் முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர்&டி) மையத்தை நிறுவ உள்ளது.
எலும்பு மற்றும் மூட்டு பாதிப்புகளை அதிகரிக்கும் நீரிழிவு நோய்; தற்காத்துக் கொள்வது எப்படி?
பொதுவாக இதய நோய்களுடன் தொடர்புடைய நீரிழிவு நோய், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
₹2.9 லட்சம் கோடி உள்கட்டமைப்பு நிதிகளை செலவிடாமல் வைத்திருக்கும் இந்தியாவின் 19 மாநிலங்கள்
இந்தியாவின் 19 மாநிலங்கள் தங்கள் மூலதனச் செலவின பட்ஜெட்டுகளை கணிசமாகக் குறைவாகப் பயன்படுத்தியுள்ளன.
முறைகேடுகள் காரணமாக 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களுக்குத் தடை விதித்தது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
சுங்கச்சாவடிகளில் மோசடிகளில் ஈடுபட்டதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14 சுங்கச்சாவடி வசூல் நிறுவனங்களை தடை செய்துள்ளது.
டுவைன் பிராவோ முதல் அக்சர் படேல் வரை; ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு போட்டியில் கேப்டனாக செயல்பட்ட வீரர்கள்
ஐபிஎல் 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
விண்வெளிக்குச் சென்று வந்தால் தலைமுடியின் கலர் மாறுமா? சுனிதா வில்லியம்ஸின் சாம்பல் நிற முடியின் பின்னணி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாள் பயணத்திற்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சமீபத்தில் பூமிக்குத் திரும்பினர்.
வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்; உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவு
டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து அலகாபாத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.
உலகின் நம்பர் 2 வீரரை தோற்கடித்த தமிழக இளம் பேட்மிண்டன் வீரர் சங்கர் முத்துசாமி
ஸ்விஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகின் நம்பர் 2 வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனை மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு பரபரப்பான போட்டியில் தோற்கடித்தார்.
இந்தியாவின் மிக ஏழ்மையான எம்எல்ஏ பாஜகவைச் சேர்ந்தவர்; சொத்து மதிப்பு வெறும் ரூ.1,700 தான்
28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்தியாவின் எம்எல்ஏக்களின் சொத்துக்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலைத் தொடர்ந்து ஜொமோட்டோ அதிகாரப்பூர்வமாக எடெர்னல் லிமிடெட் என பெயர் மாற்றம்
முன்னணி உணவு மற்றும் மளிகை விநியோக தளமான ஜொமோட்டோ, வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் அதன் நிறுவனப் பெயரை எடெர்னல் லிமிடெட் (Eternal Limited) என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கல்வித் துறையை கலைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்
ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) அமெரிக்க மத்திய அரசின் கல்வித் துறையை கலைக்கத் தொடங்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.