NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு

    தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரிப்பு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் உயர்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 21, 2025
    07:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $305 மில்லியன் அதிகரித்து, மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் $654.271 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

    முன்னதாங்க, முந்தைய வாரத்தில் $15.267 பில்லியனின் குறிப்பிடத்தக்க உயர்வைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மிகக் கூர்மையான வாராந்திர அதிகரிப்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

    ரிசர்வ் வங்கி நடத்திய $10 பில்லியன் அந்நிய செலாவணி பரிமாற்றமே இந்த அதிகரிப்பிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

    இருப்பினும், நாணய ஏற்ற இறக்கத்தை நிர்வகிக்க மறுமதிப்பீடு மற்றும் மத்திய வங்கி தலையீடுகள் காரணமாக ஒட்டுமொத்த இருப்புக்கள் ஏற்ற இறக்கமாக உள்ளன.

    விபரங்கள்

    அந்நியச் செலாவணி விபரங்கள்

    சமீபத்திய தரவுகள், இருப்புக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி சொத்துக்கள் $96 மில்லியன் குறைந்து $557.186 பில்லியனாக குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

    இந்த சொத்துக்கள் பல நாணயங்களில் வைத்திருப்பதால், டாலர் அடிப்படையில் அவற்றின் மதிப்பு நாணய மதிப்பு உயர்வு அல்லது தேய்மானத்தின் அடிப்படையில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

    தங்க இருப்பு $66 மில்லியன் அதிகரித்து, மொத்தம் $74.391 பில்லியனாக உயர்ந்துள்ளது. சிறப்பு பெறுதல் உரிமைகளும் (SDRகள்) $51 மில்லியன் அதிகரித்து $18.262 பில்லியனாக உயர்ந்துள்ளது.

    கூடுதலாக, சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் இருப்பு நிலை $283 மில்லியன் அதிகரித்து $4.431 பில்லியனாக உள்ளது.

    சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், அந்நிய செலாவணி இருப்பு இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானதாக உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அந்நியச் செலாவணி
    ரிசர்வ் வங்கி
    ஆர்பிஐ
    இந்தியா

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    அந்நியச் செலாவணி

    இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ.87.29 ஆக சரிவு ரூபாய்
    அந்நிய செலாவணி விதி மீறல்; பேடிஎம் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் பேடிஎம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இரண்டு வருடங்களில் இல்லாத அளவு உயர்வு; ஒரே வாரத்தில் $15.27 பில்லியன் அதிகரிப்பு வர்த்தகம்

    ரிசர்வ் வங்கி

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு இந்தியா
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஐந்தாவது வாரமாக சரிவு; ஆர்பிஐ தகவல் இந்தியா
    ரிசர்வ் வங்கி கவர்னரையும் விட்டு வைக்காத டீப்ஃபேக் வீடியோ;  முதலீட்டாளர்களுக்கு RBI வெளியிட்ட எச்சரிக்கை டீப்ஃபேக்
    ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி ஆர்பிஐ

    ஆர்பிஐ

    UPI Liteக்கான பரிவர்த்தனை வரம்பு ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது  யுபிஐ
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 3.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது; ஆர்பிஐ அறிக்கை இந்தியா
    தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவு; இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி இந்தியா
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவு இந்தியா

    இந்தியா

    பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி உத்தரப்பிரதேசம்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் மரண தண்டனை
    52% இந்திய ஊழியர்கள் வேலையை விட்டு விலக முக்கிய காரணம் இதுதான்: கணக்கெடுப்பு வணிகம்
    ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி டொனால்ட் டிரம்ப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025