NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, ஆனால்.. கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, ஆனால்.. கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
    முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை, ஆனால்.. கூட்டுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 22, 2025
    02:10 pm

    செய்தி முன்னோட்டம்

    2026க்கு பிறகு வரவிருக்கும் தொகுதி மறுவரையறை செயல்முறை குறித்த கவலைகள் குறித்து விவாதிக்க சென்னையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தற்போதைய மக்கள்தொகை புள்ளிவிவரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு எல்லை நிர்ணய செயல்முறையையும் எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

    மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால் அது சில மாநிலங்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று கூறினார்.

    எதிர்க்கவில்லை

    தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை

    இது மத்திய நிதிக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

    நியாயமற்ற முறையில் தொகுதிகளை மறுபகிர்வு செய்வது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் போதுமான ஆதரவு இல்லாமல் முக்கியமான சட்டங்களை உருவாக்க வழிவகுக்கும் என்று கூறினார்.

    மேலும், இத்தகைய மாற்றங்கள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், மாணவர்களின் வாய்ப்புகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை எதிர்மறையாக பாதிக்கும் என்றும், அதே நேரத்தில் சமூக நீதி மற்றும் பிராந்திய அடையாளங்களை அச்சுறுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

    தமிழகம் தொகுதி மறுவரையறைக்கு எதிரானது அல்ல, மாறாக நியாயமற்ற அணுகுமுறையை எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்திய ஸ்டாலின், நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க.ஸ்டாலின்
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள நந்தினி குப்தா! அழகி போட்டி
    பொதுமக்கள் கவனத்திற்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர வேண்டும்!  விமானம்
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி

    மு.க.ஸ்டாலின்

    செப்டம்பர் 27இல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; எதற்காகத் தெரியுமா? பிரதமர் மோடி
    செஸ் ஒலிம்பியாட் 2024: வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து  செஸ் போட்டி
    ஜாமீனில் வந்ததும் மீண்டும் அமைச்சராக்கப்படுவாரா செந்தில் பாலாஜி? செந்தில்
    பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன? பிரதமர் மோடி

    தமிழகம்

    தாது மணல் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி; நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர், துணை முதல்வர் துரைமுருகன்
    திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
    தமிழகத்தில் தொடரும் இன்ப்ளுயன்ஸா தொற்று; தடுப்பூசியை கட்டாயமாக்கிய தமிழக சுகாதாரத்துறை தமிழக அரசு

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதி வரை டிரெக்கிங்குக்கு தடை; என்ன காரணம்? தமிழ்நாடு செய்தி
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை எச்சரிக்கை

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தகவல் தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ் சிறப்பு பேருந்துகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025