ஈரான் இஸ்ரேல் போர்: செய்தி
ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி; நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்
கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் எதிரொலி: எண்ணெய் விலை 12% க்கும் அதிகமாக உயர்ந்தது
ஈரானிய இராணுவம் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்திய பின்னர் எண்ணெய் விலைகள் 12% க்கும் மேலாக உயர்ந்துள்ளன.
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
ஈரான் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள்
இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற உத்தரவிட்ட டிரம்ப்
மத்திய கிழக்கு ஆபத்தான இடமாக இருக்கலாம் என்பதால், அமெரிக்க பணியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக புதன்கிழமை தெரிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 281 பேர் காயம்
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பில், குறைந்தது 281 பேர் காயமடைந்ததாக அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த போகும் அமெரிக்கா
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.
ஈரானில் ஹமாஸ் தலைவர் ஹனியேவை கொன்றதை ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ், ஜூலை மாதம் ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதை முதல் முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
ஈரானின் தலைவர் கமேனிக்கு பதிலாக அவரது மகன் தேர்வா? யார் அவர்?
இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில், ஈரானில் உள்நாட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி; 80 ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு உரிய பதிலடி; ஈரான் எச்சரிக்கை
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை ஈரானிய ராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு, எந்தவொரு இஸ்ரேலிய நடவடிக்கைக்கும் உரிய எதிர்வினை இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பதிலடி; ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லிய வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
சனிக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை இஸ்ரேல் ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த அமெரிக்க அரசின் ரகசிய ஆவணம் கசிவு
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சாத்தியமான பதிலடித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்க அரசின் மிகவும் இரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார்.
போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும்; இந்தியாவுக்கான ஈரான் தூதர் கோரிக்கை
மேற்கு ஆசியாவில் உள்ள மோதல்கள் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு அளவிலான போரை ஆபத்தில் ஆழ்த்தும் அபாயகரமான தொடர் வளர்ச்சியைத் தூண்டும் நிலையில், இந்தியாவிற்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி, பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தியாவின் முயற்சியை நாடியுள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை
இஸ்ரேல் மீது ஈரானின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சாத்தியமான இடையூறுகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன.
'எங்கள் எதிரிகளை தோற்கடிப்போம்': இஸ்ரேல் போருக்கு மத்தியில் ஈரானின் தலைவர் கமேனி உரை
மத்திய தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி கிராண்ட் மொசல்லா மசூதியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி வெள்ளிக்கிழமை சொற்பொழிவை நிகழ்த்தினார்.
ஈரானின் அணுசக்தி ஆலைகள் மற்றும் எண்ணெய் வளங்களை அழிக்க இஸ்ரேல் திட்டம்: அமெரிக்காவின் பதில் என்ன?
இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரானின் போர் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அந்நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் திட்டமிட்டு வருகிறது.
ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்: குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்
செவ்வாயன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை ஒரு பரந்த போரின் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுவதால், ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று இந்திய குடிமக்களுக்கு அரசாங்கம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதட்டம்: விமான சேவைகள் இடைநிறுத்தம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், விமான நிறுவனங்கள் இஸ்ரேல், லெபனான் ஆகிய நாடுகளுக்கு விமான இடைநிறுத்தத்தை நீட்டித்துள்ளன.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் மீது நேற்று ஈரான் 200 ஏவுகணைகளை வீசி தாக்கியது.
இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம்
நேற்று நள்ளிரவு இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் ஈரானால் நடத்தப்படவுள்ள தாக்குதலை சமாளிக்க அமெரிக்கா தயாராக உள்ளது: வெள்ளை மாளிகை
இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் ஈரான் அல்லது மத்திய கிழக்கில் அதன் பினாமிகளால் நடத்தப்படும் குறிப்பிடத்தக்க தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராகிவிட்டதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக G7 ஐ அமெரிக்கா எச்சரித்துள்ளது: அறிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தும் சாத்தியம் குறித்து ஜி7 நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவிய ஹெஸ்பொல்லா; அயர்ன் டோம் இயக்கப்பட்டது
ஹெஸ்பொல்லா சுமார் 50 ராக்கெட்டுகளை லெபனானில் இருந்து இஸ்ரேலின் மேல் கலிலியை நோக்கி ஏவியுள்ளது.
ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா
ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும், ஈரானிடமிருந்து இந்த வார இறுதியில் மற்றுமொரு தாக்குதலை எதிர்பார்த்துள்ளது.
ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டது எப்படி? அவரின் விருந்தினர் மாளிகைக்குள் வெடிகுண்டு கடத்தப்பட்டது எப்படி?
இரு தினங்களுக்கு முன்னர் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவர் தங்கியிருந்த தெஹ்ரான் விருந்தினர் மாளிகைக்குள் இரகசியமாக கடத்தப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டார்
கடந்தாண்டு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் கடந்த மாதம் காசாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது 'நேரடி' தாக்குதல் நடத்த ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது "நேரடி தாக்குதல்" நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார்; இஸ்ரேல் மீது குற்றம் சாட்டும் ஹமாஸ்
ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே புதன்கிழமை அதிகாலை தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமிகளில் ஐந்து பேர் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது.
இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா: மோதலில் இருந்து ஈரான்-இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல்
ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க அமெரிக்கா நேற்று முன் வந்ததால், அந்த மோதலில் இருந்து ஈரானும் இஸ்ரேலும் பின்வாங்குவது போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
'அடுத்த பதிலடி அதிகபட்ச அளவில் இருக்கும்': இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்
இஸ்ரேல் மீது ஈரான் 300 எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதலை சில நாட்களுக்கு முன் நடத்தியது.
ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல்
ஒரு ஊடக அறிக்கையின்படி, இஸ்ரேல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று காலை இஸ்ரேல், ஈரானை ஏவுகணைகளால் தாக்கியது.
ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல்
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் மீது எதிர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை இறுதி செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.