NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா
    ஈரானிடமிருந்து இந்த வார இறுதியில் மற்றுமொரு தாக்குதலை எதிர்பார்த்துள்ளது

    ஈரானில் இருந்து மற்றொரு வார இறுதி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்; ராணுவ தளவாடங்களை அதிகரிக்கும் அமெரிக்கா

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 03, 2024
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 13 அன்று ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவி ஏறக்குறைய நான்கு மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரேலும், அமெரிக்காவும், ஈரானிடமிருந்து இந்த வார இறுதியில் மற்றுமொரு தாக்குதலை எதிர்பார்த்துள்ளது.

    இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளிடமிருந்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாக்கவும் இஸ்ரேலைப் பாதுகாக்கவும் அமெரிக்கா ஏற்கனவே கூடுதல் போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு அறிக்கை கூறுகிறது.

    இந்த வார இறுதியில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கப் போகிறது என்று ஜோ பைடன் நிர்வாகம் உறுதியாக நம்புகிறது என்று அறிக்கை கூறுகிறது.

    மோசமான தாக்குதல்

    எதிர் தாக்குதல் பயங்கரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

    எதிர் தாக்குதல் பயங்கரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஈரானின் உயர்மட்ட ஜெனரலைக் கொன்ற சிரியாவில் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏப்ரல் 13 தாக்குதலை விட இந்தத் தாக்குதல் பரந்ததாகவும் சிக்கலானதாகவும் இருக்கும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.

    நிலைமையை மோசமாக்கும் வகையில், ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இந்த வார தொடக்கத்தில், பெய்ரூட்டில் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ரைக் கொன்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு, கடுமையாக பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

    டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயர்மட்டத் தளபதி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஏப்ரலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    மத்திய கிழக்கு பிராந்தியம்

    இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கு பிராந்தியம் ஒத்துழைக்குமா?

    முந்தைய தாக்குதலின் போது, இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா உட்பட பல அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றது.

    இது ஈரானிய மற்றும் ஹூதி ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்த உதவியது. அதேபோல ஏவுகணைகளை இடைமறிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்தவும் அந்த நாடுகள் அனுமதித்தன.

    எவ்வாறாயினும், இம்முறை, ஆக்சியோஸின் அறிக்கையின்படி, மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் கடுமையான கண்டனங்களை ஈர்த்துள்ள ஹனியேவின் படுகொலையுடன் தொடர்புடைய அதே அளவிலான ஒத்துழைப்பைப் பெறுவது கடினம் என்று அமெரிக்கா கருதுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    ஈரான்
    ஈரான் இஸ்ரேல் போர்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்

    இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா: மோதலில் இருந்து ஈரான்-இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல்  ஈரான்
    இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்  உலகம்
    ரஃபா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவிப்பு: எகிப்து கடும் எதிர்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தீவிரமடைந்தது பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் முழுவதும் ஏராளமானோர் கைது அமெரிக்கா

    ஈரான்

    இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    போர் பதட்டம்: ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் ஏர் இந்தியா விமானங்கள் இஸ்ரேல்
    17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான்  இந்தியா
    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு  இஸ்ரேல்

    ஈரான் இஸ்ரேல் போர்

    ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை  ஈரான்
    ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல் ஈரான்
    ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததை அடுத்து ஈரானிய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை ஈரான்

    அமெரிக்கா

    புளோரிடாவில் இருந்து வருடத்திற்கு 120 முறை ராக்கெட்டுகளை ஏவ  ஸ்பேஸ்X திட்டம்: போட்டியாளர்கள் அதிருப்தி   நாசா
    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படவுள்ளது கூகுள் பிக்சல்
    சூப்பர் மார்க்கெட்டுகளில் தோட்டாக்களை விற்க AI வெண்டிங் மெஷின்களை அறிமுகம் செய்தது அமெரிக்க நிறுவனம் தொழில்நுட்பம்
    அமெரிக்காவில் டெலிவரி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினால் உடனே அரெஸ்ட் தான் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025